Monday, May 30, 2016

புறநானூறு - 112. உடையேம் இலமே!

புறநானூறு - 112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல் 
துறை: கையறு நிலை 

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!


பொருளுரை:

ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது 
நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்;
எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. 

அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. 
ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; 
நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

Description: (A Song About Vel Paari)

On that day when the three kings were surrounded Parambu, 
we were with our father in the light of the full moon happily.
This Parambu was also ours. 

But today in the light of the white moon, 
we are suffering without our father as the enemies have captured our hill. 

-Paari's daughters


முலம்:

புறநானூறு - 111. விறலிக்கு எளிது!

புறநானூறு - 111. விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. 
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.


அளிதோ தானே, பேர்இருங் குன்றே;
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே


பொருளுரை:

மிகப் பெரிய பறம்பு மலை இரங்கத் தக்கது. 
அதை வேற்படையால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரிது. 

நீலமலர்களைப் போன்ற மை தீட்டிய கண்களையுடய பெண்கள் 
கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

Description:(A Song About Vel Paari)

This big, black Parambu of Paari is pitiable. 
It cannot be conquered by those who fought with vel. 

But for the Virali who has kuvalai flowers like eyes,
it is easy to get Parambu as she comes singing to get a gift. 

-Kapilar


முலம்:

இயற்கை வழியில் தயாரித்த பால் (ஏ2 ரகம்)


www.astradairy.in.
www.madrasmilk.com.
www.thefarm.in.
therightmoo.com
facebook.com/traderkoshy


http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/all-the-right-moos/article8656903.ece

இவரது பண்ணை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.வி. சுவாமிநாதனின் பேரன் இவர்.

http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-25/current-affairs/125441-26-cows-rupees-12-lakhs-income.art


Friday, May 27, 2016

புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!

புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்

யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

பொருளுரை:

வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய
நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது.

குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது.
அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர்.

எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான்.
நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும்,
எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.


Description:(A Song About Vel Parri)

Oh kings!
Though you three fight together , you cannot get Paari's Parambunaadu.

The Paanaas have got the three hundred villages as gifts.

Paari, myself and Parambu hill are still left here as gifts if you come singing to get gifts.

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/10/110.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Thursday, May 26, 2016

புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!

புறநானூறு - 109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து

மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

பொருளுரை:

பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது.
பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும்,
உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன.

ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு,
இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும்.

மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்.
நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து,
கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.

பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது.
அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன.

அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும்,
இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது.

நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன்.
அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும்
முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி,

மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால்,
பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.


Description:(A Song About Vel Paari)

Oh three kings having hills and victorious murasus !
You three surrounded his country together.

Paari's Parambu hill has four kinds of yieldings got without ploughing.
There paddy grows in small leaved bamboo.

There are sweet smelling jack fruits everywhere.
In the valli creepers there are tubers(eatable roots).

The honey combs springs honey when the male monkeys jump on them.
His hill is as vast as the sky.

The water sources in the hill are as many as the stars in the sky.
Though you tie up your elephants to each tree, keep standing your chariots in the empty places,
you cannot succeed in your effort of winning him.

You cannot get his country with your swords.
He won't give his country.

I know how to capture his country.
So you do what I say. If you with yaazhs, followed by your wives as Viraliyar
and if you go singing and dancing in front of Paari,
he will give his Parambu hill and his country as gifts.

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/10/109.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Tuesday, May 24, 2016

புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!

புறநானூறு - 108. பறம்பும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான் அவர்வரை யன்னே.


பொருளுரை:

குறிஞ்சிப்பெண் ஒருத்தி அடுப்பில் செருகிய வற்றிய கொள்ளிக்கட்டை சந்தனமாகையால்,
அதன் அழகிய புகை அருகில் உள்ள மலைச்சரிவில் இருக்கும்
வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கெல்லாம் பரவுகிறது.

அத்தகையது பறம்பு நாடு.
தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்குப் பாரி பறம்பு நாட்டையே பரிசாக அளித்ததால்
அது இப்பொழுது அவர்க்கு உரியதாயிற்று.

பரிசிலர் பாடி வந்து, “உன்னையே பரிசாக எமக்குத் தர வேண்டுமென்று” கேட்டால்,
அறத்தை மேற்கொண்டு,
பாரி அவரிடம் வரமாட்டேன் என்று கூற மாட்டான்.


Description:(A Song About Vel Paari)

As the last fire wood which was put in the oven was sandal wood
its sweet smell mixed with the aroma of the vengai flowers spread .

Paari was a patron who felt happy on giving to those who come praising his Parambu hill.
If some one says that he is the gift they need, he will give himself as a gift at that moment itself.

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/10/108.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html


Monday, May 23, 2016

புறநானூறு - 107. மாரியும் பாரியும்!

புறநானூறு - 107. மாரியும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே.

பொருளுரை:

நடுநிலை தவறாத (நாவையுடைய) புலவர் பலரும் 
“பாரி, பாரி” என்று பாரி ஒருவனையே உயர்வாகப் புகழ்கிறார்கள். 

பாரி ஒருவன் மட்டும் (தன் கொடையால்) இவ்வுலகைக் காக்கவில்லை; 
இவ்வுலகைக் காப்பதற்கு மழையும் உண்டு.

Description:(A Song About Vel Paari)

The poets who speak the truth always praise Paari. 
There is not alone Paari, but there is the rain which saves the world. 

-Kapilar


முலம்:
http://puram400.blogspot.in/2009/09/107.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Saturday, May 21, 2016

புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!

புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கைவண் மையே.


பொருளுரை:

நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, 
சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் 
அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், 

கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. 
அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ 
பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் 
தன் கடமையாகக் கருதுபவன் பாரி.


Description:(A Song about Vel Paari)

If one gives erukkam flowers because he has only that no god will refuse to accept it. 
Though they are foolish and have mean qualities, patron Paari will give them with pleasure. 

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/106.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Friday, May 20, 2016

புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!

புறநானூறு - 105. தேனாறும் கானாறும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண். 
துறை: விறலியாற்றுப்படை. 

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி

கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

பொருளுரை:

ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! 
பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய 
குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் 
குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், 

மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் 
சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், 
கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. 

அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. 
நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.

”மால்புடை நெடுவரைக் கோடுதொறும்” என்பதற்கு ”கண்ணேணியையுடைய 
நெடிய மலையினது சிகரங்கள் தோறும்” என்றும் பொருள் கொள்ளலாம்.


Description:(A Song About Vel Paari)

Oh Virali having beautiful forehead ! 
You will get valuable ornaments. 

The honey drops which come from the blue flowers in the big pond 
run through the ploughed land though the rain falls or not. 

The water falls from the hill with bamboos run as rivers. 
You sing the praise of the patron Paari. 
His sweetness is greater than these. 

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/105.html

http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Tuesday, May 17, 2016

புறநானூறு - 104. யானையும் முதலையும்!

புறநானூறு - 104. யானையும் முதலையும்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 

போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ

நுண்பல் கருமம் நினையாது
இளையன்என்று இகழின் பெறல்அரிது ஆடே.

பொருளுரை:

வீரர்களே! உங்களுக்கு நான் (ஒன்று) கூறுகிறேன்! 
ஊர்ச் சிறுவர் விளையாடுவதால் கலங்கும் அளவுக்கு நீர் குறைவாக, 
அவர்களின் கால் அளவே இருந்தாலும், அந்த நீரில், 
முதலை யானையை இழுத்து, வென்று வீழ்த்திவிடும். 

அந்த முதலை போன்றவன் என் தலைவன். 
அவனுடைய ஊராகிய தகடூரில் அவனை வெல்வது உங்களால் இயலாத செயல். 
அவனுடைய நுண்ணிய ஆற்றலையும் செயல்களையும் சிந்தித்துப் பார்க்காமல், 
அவன் இளையவன் என்று அவனை 
இகழ்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. 

(இனியாவது) உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் 


Description:(A SongAbout Adhiyamaan Nedumaan anji)

Oh enemy warriors ! I am telling you this. 
Save yourself. 
Though the water source is so small so that small children stir the water with their ankles, 
the crocodiles in that water source will be strong enough to kill the strong elephants. 

Our lord Nedumaan Anji is also having such strength. 
Not knowing his brave deeds, if you wish to have his enmity thinking that he is young, 
you cannot succeed. 

-Avaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/09/104.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Monday, May 16, 2016

புறநானூறு - 103. புரத்தல் வல்லன்!

புறநானூறு - 103. புரத்தல் வல்லன்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: விறலியாற்றுப்படை. 

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!

செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை

மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே!


பொருளுரை:


காவடியில் ஒரு பக்கம் பதலையும் 
ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, 

”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! 

போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை, 
மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் 
பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான்.

நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். 
அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான 
அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். 

வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். 
வாழ்க அவன் திருவடிகள்!


Description:(A SongAbout Adhiyamaan Nedumaan anji)

Oh Virali ! You are bearing a kaavadi. 

At one end of the kaavadi, there is a padhalai and at the other end there is a muzha. 

You are walking with a thought , “who will fill up my vessel ? “ 
You go to Adhiyamaan. His palace is not so far.

 The smoke which arose when the fire was lighted to destroy 
the enemies cover the young elephants like the clouds that cover the hills. 
He who has a vel is in the nearby enemy country. 
He will fill up your eating vessels with sweet fleshy food , so that it never goes empty. 

Though the world suffers with poverty, he will not fail to give you. 
Let his golden kazhals live who will give to the beggars. 
-Avaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/103.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

புறநானூறு - 102. சேம அச்சு!

புறநானூறு - 102. சேம அச்சு!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 

எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்

கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே?


பொருளுரை:


காளைகள் இளையவை; நுகத்தடியில் பூட்டப் படாதவை. 
வண்டியில் பண்டங்கள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. 
(போகும் வழியில்) வண்டி பள்ளத்தில் இறங்க வேண்டியதாக இருக்கலாம்; 

மேட்டில் ஏற வேண்டியதாக இருக்கலாம்;
வழி எப்படி இருக்கும் அன்பதை யார் அறிவர் என்று எண்ணி 
உப்பு வணிகர்கள் தங்கள் வண்டியின் அடியில் பாதுகாப்பாகக் கட்டிய சேம அச்சு போன்றவனே! 

விளங்கும் புகழும், கொடையளிக்கக் கவிழ்ந்த கையும் உடைய உயர்ந்தோனே! 
நீ முழுமதி போன்றவன். 
உன் நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது?


Description:(A Song About Pohutezhini)

The bulls are young. 
They are capable of drawing the cart without knowing 
that the wood lock is attached to their necks. 
The cart is overloaded . 

The salt sellers afraid what will happen to the cart 
when its wheels go down to the pit or go up the bump. 

They attach a safety axle to support the main axle. 
Pohutezhini is like that safety axle. 
He has great fame and hands which give gifts to others. 
He is like the shining full moon. 

There is no sorrow for those who live under his white umbrella. 
-Avaiyaar



முலம்:
http://puram400.blogspot.in/2009/09/102.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

Saturday, May 14, 2016

புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!

புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்: அவ்வையார்,
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடா நிலை. 


ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!

வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!

பொருளுரை:

நாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; 
பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், 
அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். 

அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட 
தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம் தாழ்த்தினாலும் 
தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை 
உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் 
நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! 
வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!


Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)

We did not go for a single day. 
We did not go for two days. 
We went several days with several people. 

But he received us with the same desire which was on the first day. 
He has elephants with golden ornaments on their foreheads and beautiful chariots. 
Though he delays to give gifts or not, like the food that is kept in between the tusks of the elephant, 
it is sure that we can get it. Oh heart ! 

Don't worry. Let his feet long live. 
-Avaiyaar



முலம்:
http://puram400.blogspot.in/2009/09/101.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

புறநானூறு - 100. சினமும் சேயும்!

 
புறநானூறு - 100. சினமும் சேயும்!


பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு

வெட்சி மாமலர் வேங்கையடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே;

செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே.


பொருளுரை:

கையிலே வேல்;
கால்களிலே அழகான கழல்கள்;
உடலிலே வியர்வை;
கழுத்திலே ஈரம் ஆறாத புண்;

பகைவரை அழிப்பதற்காக,
வளரும் இளம் பனங்குருத்தின் உச்சியில் உள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டையும்,
வெட்சியின் பெரிய மலர்களோடு வேங்கைப் பூவும் கலந்து சுருண்ட,
கரிய முடியில் அழகுறச் சூடி,

புலியோடு போரிட்ட வலிய யானையைப் போல
இன்னும் நீங்காத சினத்துடன் அதியமான் உள்ளானே!

இவனுடன் சினந்து போரிட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள்.
பகைவரைப் பார்த்த கண்கள் தன் புதல்வனைப் பார்த்தும்
சிவப்பு நிறம் குறையாமல் இருக்கின்றனவே!

Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)

You have vel in your hand,
kazhal on your legs,
sweat on your body,
fresh wound on the neck,
garland made up of palm flowers on your head, a
nd black, spring like hair adorned with vetchi and vengai flowers.

You are standing with anger like a strong elephant which has fought with the tiger which has lines on its body.
Alas ! Those who against you cannot escape.
The eyes which look his enemies with
fire like red colour do not change
even after seeing his lovely son.

-Avaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/100.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

Friday, May 13, 2016

புறநானூறு - 99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

புறநானூறு - 99 அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை. 


அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல

ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்

சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.


பொருளுரை:

தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, 
அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய 
கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 
கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் 
பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, 

காலில் பொன்னாலான அழகிய கழல்களும், 
கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும், 
பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும், 

ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும், 
உன் மனம் நிறைவடையவில்லை. 

போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று 
எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட்டது. 
அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய். 
கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும் 
அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய 
உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே. 

பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!


Description: (A Song About Adhiyamaan Nedumaan Anji)

You respect Devaas, do velvies, give the rare sugarcane to this world, 
rule up to Naahalogam which is under the sea and you live like your ancestors. 

You have golden kazhals on your legs and garland made up of palm flowers. 
You have parks with plenty of flowers, vel which has flesh, seven kinds of symbols and long lasting ruling right. 

Though you have so many like this, you went to fight with the seven kings. 
You defeated them and had the strength which cannot be sung. 

Now ,because of your Kovaloor victory you have attained the fame of being sing by Paranar. 
-Awvaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/99.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html