Monday, May 30, 2016

புறநானூறு - 111. விறலிக்கு எளிது!

புறநானூறு - 111. விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி. 
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.


அளிதோ தானே, பேர்இருங் குன்றே;
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே


பொருளுரை:

மிகப் பெரிய பறம்பு மலை இரங்கத் தக்கது. 
அதை வேற்படையால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரிது. 

நீலமலர்களைப் போன்ற மை தீட்டிய கண்களையுடய பெண்கள் 
கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

Description:(A Song About Vel Paari)

This big, black Parambu of Paari is pitiable. 
It cannot be conquered by those who fought with vel. 

But for the Virali who has kuvalai flowers like eyes,
it is easy to get Parambu as she comes singing to get a gift. 

-Kapilar


முலம்:

No comments: