Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Thursday, September 8, 2016

ஊரும் பொருளும்

குமாரபாளையம் லுங்கி 120 ரூபாய்.

நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்) வெல்லம் ஒரு கிலோ ரூபாய் 25

கும்பகோணம் (தஞ்சாவூர்) வெற்றிலை.ஒரு கவுளி ரூபாய் 60

நத்தம் ரெடிமேட் சட்டைகள் நத்தம் சென்ட்ரல் சினிமா வீதி (திண்டுக்கல்) சட்டை 

சீர்காழி (நாகப்பட்டினம்)  பிரம்பு ஊஞ்சல், சோபா

கரூர் (கரூர் பஸ் நிலையத்துக்குப் பின்புறமுள்ள 80 அடி சாலை) வீட்டு உபயோக துணி வகைகள்

பத்தமடை  (திருநெல்வேலி)  பாய் 150 

திண்டுக்கல் பூட்டு 

சென்னிமலை (ஈரோடு) போர்வை 

மார்த்தாண்டம் (கன்னியாகுமரி) தேன் 100 - 150 ரூபாய்

 கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் பயிர் செய்யப்படுகிறது. 

http://www.vikatan.com/avalvikatan/2016-sep-20/lifestyle/123125-places-and-their-famous-products-in-tamil-nadu.art

http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-10/yield/124856-herbal-plants-in-lucknow.art

Wednesday, April 22, 2015

தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?

தங்கம் வாங்கும்போது கவனமாக இருங்கள்; ஹால்மார்க் முத்திரையுள்ள தரமான நகைகளை மட்டுமே வாங்குங்கள்; போலி நகைகளைக் கண்டு ஏமாற வேண்டாம்' என, இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.

* பி.ஐ.எஸ்., முத்திரை
* தூய்மைக்கான, 916 பதிவு
* ஹால்மார்க் மைய முத்திரை
* முத்திரை ஆண்டு குறியீடு (ஆண்டுதோறும் மாறுபடும்; இந்த ஆண்டு குறியீடு கூ)
* நகைக் கடையின் முத்திரை என, ஐந்து பதிவுகளும் நகைகளில் இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும், தரமானது அல்ல. 
* புகாருக்கு... நகைகள் தரமில்லை என்றாலும், விதி மீறல்கள் இருந்தாலும், 044-2254 1442, 2254 1311 என்ற தொலைபேசி எண்கள், 

044-2254 1087 என்ற பேக்ஸ்,ddgs@bis.oqõg.in என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் புகார் செய்யலாம்.

மேலும் படிக்க:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1234787
http://www.dinamani.com/specials/magalirmani/2014/04/30/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2198098.ece


Thursday, November 6, 2014

அரசியல் : கடல் வணிகம்


பெரியவர் வேலாயுதம் புட்டுப்புட்டுவைத்தார். “தம்பி, காலங்காலமா கடலுக்குப் போவணும்னா, கடலோடி மட்டும்தான் போவ முடியும்னு இருந்துச்சு. சுதந்திரத்துக்கு அப்புறம் மீன்பிடியை அதிகரிக்கணும்னுட்டு அரசாங்கம் நினச்சிது பாருங்க, விசைப்படகு, இழுவ மடின்னு அடுத்தடுத்து கொண்டாந்துட்டுச்சு பாருங்க, யாரு வேணா கடலுக்குப் போவலாம்னுட்டு ஆயிட்டு. இது என்னாயிட்டுன்னா, கடலுக்குள்ள முதலீட்டைக் கொண்டாந்துட்டு. ரெண்டு வர்க்கம் உருவாவுது. ஒண்ணு, பாரம்பரியக் கடலோடிங்க வர்க்கம்; இன்னொண்ணு, தொழில்மொற கடலோடிங்க வர்க்கம். மொத வர்க்கம், காலங்காலமா கடலை நம்பிப் பொழச்சது. ரெண்டாவது வர்க்கம், பண மூட்டையோட கடக்கரைக்கு வந்தது. இந்த ரெண்டாவது வர்க்கம் என்னா பண்ணுச்சுன்னா, காச வெச்சி அடிச்சு மொத வர்க்கத்துல தொழில் தெரிஞ்ச ஆளுங்களத் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு. மொத வர்க்கம், தன்னோட அன்னாட பொழப்புக்குக் கடலுக்குப் போவுது. ரெண்டாவது வர்க்கம், தன்னோட மொதலீட்ட ரெண்ட நாலாக்கி, நால எட்டாக்கப் போவுது. பணம் மனுசனை வுடுமா? தொரத்துது. எட்ட பதினாறாக்கவும், பதினாற நூறாக்கவும் தொரத்துது. மனுசன் கடல அரிக்க ஆரம்பிச்சுட்டான்” என்கிற பெரியவர், கரையோரமாகப் போடப்பட்டிருக்கும் ஒரு வலையைக் கையில் எடுக்கிறார்.


http://writersamas.blogspot.in/2014/09/blog-post_5.html