Sunday, March 1, 2015

நச்சுக்களை நீக்கும் வழிகள்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுதல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டு அழுக்கை அகற்றுதல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களில் அஞ்சனமிடுதல் செய்ய வேண்டும் என்கிறது, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம். இப்படி செய்யும்போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

காலை 6-7 மணி அளவில் எலுமிச்சை டீ யுடன், இந்து உப்பு, மிளகு சேர்த்து மிடறு மிடறாக (Sip by sip) 15 நிமிடங்கள் வரை குடிக்க வேண்டும். காலை உணவாக, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். மதியத்தில், கஞ்சி, காய்கறி உப்புமா போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம். இரவில் பழங்களை (2 வாழை)சாப்பிடலாம். மறுநாள் காலை 7 மணி அளவில் நெல்லிச் சாற்றைக் குடித்து, விரதத்தை முடிக்கலாம்.


http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103710

No comments: