நாட்டுக்காய்கறிகள்
கத்திரி, முருங்கை, வெண்டை, பரங்கிக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய், அவரை, துவரை, முள்ளங்கி, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய் எனக் கடைசியில் ‘காய்’ என முடியும் எல்லாமே நம் ஊர் பாரம்பரியக் காய்கறிகளே. மார்க்கெட் மதிப்புக் குறைவாக இருப்பதால், கொத்தவரங்காய், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவை அதிகம் பயிரிடப் படுவதில்லை.
நாட்டுப்பழங்கள் எவை?
கொய்யா, மாதுளை, சீதாப் பழம், தர்பூசணி, சப்போட்டா, எலுமிச்சை, எலந்தை, நாவல், மாம்பழம், பலாப்பழம், வாழை, அன்னாசி, பப்பாளி, திராட்சை, ஆரஞ்சு போன்றவை நம் ஊரில் விளையும் பழங்கள்.
மொந்தன் வாழைப்பழம் பார்க்க அழகாக இல்லை, தோற்றம் சரி இல்லை என்பதற்காகவே சரியாக விற்பனையாகாததால், இவை அதிகமாகப் பயிரிடப்படுவது இல்லை. இதில் உள்ள சத்துக்களோ ஏராளம். இது உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்துக்கு ஏற்றது.
முலம்:
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=118118