Showing posts with label மருதாணி. Show all posts
Showing posts with label மருதாணி. Show all posts

Sunday, November 16, 2014

மருதாணியின் மருத்துவ பயன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் மருதாணி வைத்துக் கொள்ளாத பெண்களே கிடையாது. அதன் பூக்களை கூட பறித்து தலையில் வைத்துக் கொண்ட பெண்ணை கூட பார்த்திருக்கின்றோம். ஒரு கிருமி நாசினியாக, எதிர்ப்பு 
நுண்ணுயிர் பண்புகளை கொண்ட ஒரு மூலிகையாக, தோல் காப்பானாக விளங்கும் மருதாணியை அரைத்து, கைகளில் வைத்துக் கொள்வது ஆடம்பரமற்ற அமைதியான அழகு தரக்கூடியது.முடிகருப்பாக வளரஇரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி., விட்டு, 
மருதாணி இலைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் 
சாறு சேர்ந்து சிவப்பாக மாறியிருக்கும் எண்ணெய்யில் வாசனைக்காக, 10 கிராம் சந்தனத் துாள் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரை மாறும். 
நரை மாறமருதாணி விழுது, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முள்ளி துாள் இவற்றுடன் தயிர் கலந்து இரவு ஊற வைத்து, காலையில் அந்த கலவையை எடுத்து, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, சிகைக்காய் போட்டு தலை முடியை அலசினால் நாள்பட்ட நரைக் கூட மாறும்.