Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

Tuesday, November 4, 2014

திருமண விருந்தில் உணவு உண்ணாதவரின் பாடல் (ஔவையார் )


ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.

அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.

அதை ஒட்டி வந்த பாடல்

பாடல் :

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து 
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி 
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே 
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.

விளக்கம் :

வண் தமிழை கற்று தேர்ந்த வழுதி திருமணத்திற்கு சென்ற நான் அங்கே நிறைய உண்டேன் அதை சொல்கிறேன் கேள்:
அவனை நாடி உணவருந்தி வரலாம் என்று சென்ற நான் மக்களாலும், என்னை யார் என தெரியாத காவலர்களாலும் நெருக்கப்பட்டேன்(முன்டியடித்தல்) .அவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டபோது நானும் அந்த தள்ளளுக்கு உள்ளாக்கப்பட்டேன். வெகு நேரம் நடந்து வந்த காரணத்தினால் நீண்ட நேர பசியால் உடலும், மனமும் சுருக்கம் பெற்றேன்.இவ்வளவிற்கும் ஆளுண்ட நான் சோறு உண்ணவில்லை அப்பா. 


கருத்து தாக்கம்:

http://gnanamethavam.blogspot.ie/2009/08/blog-post_30.html
http://thalirssb.blogspot.com/2014/11/sweet-tamil-part-3.html