Showing posts with label ஒளவையார். Show all posts
Showing posts with label ஒளவையார். Show all posts

Sunday, September 28, 2014

படித்ததில் பிடித்தது

 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ - என்று சொன்னது ஒளவையாரா... நாலடியாரா?
ஒளவையார்தான்! புகழ்பெற்ற பல்வேறு அறக் கருத்துகளை ஒளவையார் சொல்லிச் சென்றுள்ளார். புழக்கத்தில் இருக்கும் அவை ஒளவை சொன்னதுதான் என்பது தெரியாமல் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட சில இவை:
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
உடன்பிறந்தே கொல்லும் வியாதி.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?
- இப்படி ஒளவை மொழி ஆயிரம் உண்டு!