Wednesday, March 2, 2016

புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். 

புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.

வரைபுரையு மழகளிற்றின்மிசை 
வான் றுடைக்கும் வகையபோல 
விர வுருவின கொடி நுடங்கும் 
வியன்றானை விறல்வேந்தே 
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ 

நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச் 
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் 
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும் 
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் 
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த 

எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் 
பொலம்பூங் காவி னன்னாட் டோரும் 
செய்வினை மருங்கி னெய்த லல்லதை 
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் 
கடவ தன்மையிற் கையற வுடைத்தென 

ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் 
நின்னா டுள்ளுவர் பரிசிலர் 
ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே. 

பொருளுரை:

இப்பாட்டின் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்ற ஊரினர். 
ஒருசமயம் இவர் இக் கிள்ளி வளவனைக் காண வந்தார். கிள்ளிவளவன், “நீவிர் எந்நாட்டீர்? நீர் எம்மை நினைத்தலுண்டோ?” என்று கேட்டான். 

அதற்கு, ஆவூர் மூலங்கிழார், “மலையை ஒத்த இளம் யானைகளின்மேல் ஆகாயத்தைத் தொட்டுத் 
துடைப்பது போன்ற பல நிறங்கள் கலந்த கொடிகள் அசைந்து தோன்றும் பெரும் படையை உடைய வெற்றி வேந்தனே! 

நீ கோபத்துடன் பார்க்குமிடம் நெருப்பு பரவ நீ கருணையுடன் பார்க்குமிடம் பொன் பூத்துச் சிறக்க சிவந்த சூரியனில் நிலவை விரும்பினாலும் 
வெண்மையான சந்திரனில் வெயிலை விரும்பினாலும் வேண்டியதை விளைவிக்கும் ஆற்றல் உடையவன். 

இனிமையான நிலையை உடைய, பொன்னாலான பூக்கள் நிறைந்த கற்பகச் சோலைகள் உள்ள நல்ல நாடாகிய விண்ணுலகத்தில் உள்ளோர்களும் 
தாம் செய்த நல்வினைக்கேற்ப இன்பம் அனுபவிக்க முடியுமே தவிர, செல்வமுள்ளவர்கள் வறியோர்க்கு வழ்ங்குவதும்,
வறியவர்கள் செல்வமுடையவரிடம் சென்று யாசித்தலும் அங்கே செய்ய இயலாது என்பதனால் 
அதைச் செய்ய முடியாதென எண்ணி, அங்கே பெறும் இன்பம் இவ்விடத்திலே உனது நாட்டில் பெற முடியும். 

பகைவர் தேசத்திலிருந்தாலும், பரிசு பெற விழைவோர் உனது நாட்டில் நீ இருக்கின்றாய் என்று கருதுவதால் உனது நாட்டையே நினைப்பர். 
ஆதலால் உனது நிழலில் பிறந்து உனது நிழலில் வளர்ந்த எம் நினைவின் அளவு எவ்வளவு என்று சொல்லவும் வேண்டுமோ?” 
என்று இப்பாடலில் கிள்ளி வளவனைப் பாராட்டுகின்றார். 


Description: (A Song About Sozhan Killivalavan)
Oh great king having powerful army which has colorful flags which wave up to the sky as the warriors have sit on the elephants which are like hills. 
If you look with anger that place will burn in red fire. 
If you look with cool heart that place will shine like gold. 

You have the power to make the hot sun into cold moon and the cold moon into hot sun which is like a fire planet. 
Is it necessary to say how we are living under the shadow of your white umbrella? 
Those who live in heaven where the heavenly park which blossoms with golden flowers ,enjoy pleasure according to their good deeds. 
As there are no poor people they cannot enjoy the pleasure of giving to the poor. 
Though the persons who seek heavenly pleasure and gifts live in your enemy country, they will always thinking you and your country. 
-Aavoor Moolangkizhaar


முலம்:




No comments: