Wednesday, July 6, 2016

புறநானூறு - 129. வேங்கை முன்றில்!

புறநானூறு - 129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி.
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; 
          பரிசிலர்க்கு யானைகளை வழங்கல். 

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்

ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே


பொருளுரை:

குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் 
வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, 
வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், 
இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு 
உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். 

அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. 
மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி 
எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, 
வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் 
அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு 
அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்


Description: (A Song About Vel Aai Andiran)

The Kuravaas who live in the caves drink the honey 
stored in the bamboo tubes and dance kuravai dance 
under the shadow of the vengai tree. 

Aai who belongs to this hill  which has vengai trees and jack trees , 
is strong in war. He has the desire to give to those who come singing about him. 
The elephants that were given to the Paanaas 
do not equal to the stars which are in the sky which has no black clouds. 
They are more in number than the stars. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/129.html


No comments: