Monday, May 30, 2016

புறநானூறு - 112. உடையேம் இலமே!

புறநானூறு - 112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர்
திணை: பொதுவியல் 
துறை: கையறு நிலை 

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!


பொருளுரை:

ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது 
நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்;
எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. 

அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. 
ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; 
நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

Description: (A Song About Vel Paari)

On that day when the three kings were surrounded Parambu, 
we were with our father in the light of the full moon happily.
This Parambu was also ours. 

But today in the light of the white moon, 
we are suffering without our father as the enemies have captured our hill. 

-Paari's daughters


முலம்:

No comments: