Saturday, April 9, 2016

புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்

புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்

பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் 
துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் 


குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே?


பொருளுரை:

எங்கள் குடியில் குழந்தை இறந்து பிறந்தாலும் (அல்லது பிறந்து இறந்தாலும்), உருவமற்ற தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் 
அது ஓரு ஆள் அல்ல என்று (புதைப்பதற்கு முன் மார்பில்) வாளால் வெட்டுவதிலிருந்து தவற மாட்டார்கள். 

ஆனால், யானோ அக்குடியில் பிறந்தவனாகவிருந்தாலும், (போரில் மார்பில் புண்பட்டு வீரனைப்போல் மரணமடையாமல்) சங்கிலியால் நாய்போலக் கட்டப்பட்டு, 
என் பசியைப் போக்குவதற்கு, என்னைத் துன்புறுத்திய பகைவர்களிடம் மன வலிமையின்றி உணவு வேண்டுமென்றுக் கேட்டதால் 
அவர்கள் எனக்கு அளித்த நீர்போன்ற உணவை உண்ணும் நிலையில் உள்ளேனே! 
இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர்கள் பெற்றனர்?


Description:(A Song Written By Seran Kanaikkal Irumporai)
If the child born dead , or if the baby which is not matured and which has no shape born, 
the braves cut them with sword and then only bury. 

Being dragged with chains, like a dog, by the enemies, it is shame to drink the water and quench the thirst. 
If one person does this without will power, no one will wish to give birth to such a person.   

முலம்:
http://puram400.blogspot.in/2009/04/puranaanuuru-poem-74.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html



No comments: