Tuesday, March 1, 2016

புறநானூறு - 37. புறவும் போரும்!

நப்பசலையார் இப்பாட்டில், ‘
புறாவுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்த்த ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படையினை உடைய செம்பியன் வழித்தோன்றலே! பெருந்தகையே! 

புறநானூறு - 37. புறவும் போரும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்.
துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம். 

நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த 
வேக வெந்திற னாகம் புக்கென 
விசும்புதீப் பிறப்பப் திருகிப் பசுங்கொடிப் 
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் 
புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் 

சினங்கெழு தானைச் செம்பியன் மருக 
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி 
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி 
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் 
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் 

செம்புறழ் புரிகைச் செம்மல் மூதூர் 
வம்பணி யானை வேந்தகத் துண்மையின் 
நல்ல வென்னாது சிதைத்தல் 
வல்லையா னெடுந்தகை செருவத் தானே.


பொருளுரை:
நப்பசலையார் இப்பாட்டில், ‘
புறாவுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்த்த ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படையினை உடைய செம்பியன் வழித்தோன்றலே! பெருந்தகையே! 

பசுமையான கொடிகளையுடைய பெரிய மலையின் பிளவுகளுள்ள பகுதிகளில் நஞ்சுடைய வெண்மையான பற்களையும், 
ஐந்து தலைகளையும் கொண்ட மிக சீற்றமும் சினமும் உடைய நாகப்பாம்பு புகுந்தது. வானம் தீப்பிடித்து வேகமாகப் பரவி இடி விழுந்து அங்கே தாக்கி அந்த நாகத்தை அழித்தது. 


அதுபோல், முதலைகளில் ஒருவகையான கராம் என்ற ஆண் முதலைகள் நிறைய உள்ள, கோட்டை யைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆழமான நீர் நிறைந்த அகண்ட பள்ளங்களின் (அகழி) 
இருண்ட மடுக்களில் அவைகள் ஒன்று சேரத் திரண்டோடி நடுச்சாமங்களில் ஊர்க்காவல் செல்வோரின் நிழலைக் கண்டு கவ்வுகின்றன. 

அத்தகைய முரட்டு முதலைகளையுடைய மிக நீளமான நீர்நிலைகளும், செம்பு மிகுதியாக உபயோகித்து அமைக்கப்பட்ட மதிலும் உடைய மிகச் சிறப்புடைய பழைய ஊரினுள்ளே முகபடாம் 
அணிந்த யானைகளுடைய அரசன் உள்ளே இருப்பதை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது போரில் அவற்றை அழிப்பதில் வல்லவனாய் நீ இருந்தாய்’ 
என்று கிள்ளி வளவனின் மறம் வியந்து, அவனது வாகைநலத் தைப் பாராட்டுகின்றார்.

Description:( A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)
Oh king! You invade your enemies' countries like a cruel snake which has poison, sharp teeth and five heads. 
Like the thunder which destroys the big mountain covered by green creepers, you have fired your enemies' towns. 

Oh the successor of Sembiyan who had victorious vel and brave army! 
You have the power of destroying deep ahazhies which have many crocodiles which try to eat the images of the guards thinking that they are human beings, 
walls which are like copper and forceful elephant army. 

Oh great king! You born in a famous family which removed the sorrow of a pigeon. 
What a great power do you have! -Maarokkaththu Nappasalaiyaar



முலம்:

No comments: