Tuesday, January 26, 2016

புறநானூறு - 4. தாயற்ற குழந்தை

புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி.
துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.

வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

பொருளுரை:

வாள், வெற்றியைத் தருதலால் குருதிக்கறை பட்டு செவ்வானத்தைப் போல அழகு பெற்றுப் பொலிந்தன. கால்கள், போர்க்களத்தில் இடம்பெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்வதால் கழல்கள் உடைந்து, அரும்புகள் உதிர்ந்து மழுங்கிக் கிடந்து, கொல்லும் ஆண் யானையின் கொம்புகளை ஒத்திருந்தன.

கேடயங்கள், தைத்த அம்புகளால் துளை தோன்றியும் இங்கும் அங்கும் நிலையின்றி தப்பாது இலக்கை நோக்கியும் செல்வன. குதிரைகளோ, பகைவரை அழிப்பதற்கு வேண்டும் காலத்தை இட வலமாய்த் திரும்பி இழுக்கப்பட்டதால், கடிவாளத்தால் (முகக்கருவி) காயப்பட்ட சிவந்த வாயுடன், மான் முதலானவற்றின் கழுத்தைக் கவ்வும் புலியை ஒத்தனவும் ஆகும்.

ஆண் யானைகள் கோட்டைக் கதவுகளை முறித்து சினந்து உலாவுகின்ற நுனி மழுங்கிய வெண்மையான கொம்புகளை யுடையன. உயிரைக் கொல்லும் எமனைப் போன்றன. நீ, அசைந்த தலையாட்டமணிந்த குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னாலான தேரின் மேலே பொலிவோடு தோன்றி, பெருங்கடலின் கீழ்த்திசையில் ஓங்கி எழுகின்ற சிவந்த கதிரவனின் ஒளியினை ஒத்த தன்மையை நீ உடைவனாதலால், உன்னைச் சினப்பித்தவர் நாடு தாயில்லாது உண்ணாத குழந்தை போல இடைவிடாது உன்னைக் கூப்பிடும் என்றும் பரணர் பாடுகிறார்.


The sword which is used in many victorious wars, with blood stain, looks like the red sky. The anklets dash with the enemies' legs in the battle field demise and look like the horns of the bullock which has the strength of killing.

The holes in the armor made by the arrows resemble the stable aims. The horses which are sent on the enemies when they are turned left and right, cannon makes wound and have blood shedding red mouths like the red mouth of the tiger which bites the deer's neck and drinks the blood.

The male elephants damaged the fort doors with their tusks. So the sharp tips of the white tusk have become blunt. They look like Yama, who kills takes the lives.

You are on the chariot which is made up of gold. The chariot is drawn by horses with moving manes. You are looking handsome like red sun, which rises from the big sea.

 You have so much strength so that the people of the enemy country will suffer without food like the motherless child. -Paranar

முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html
http://eluthu.com/kavithai/121000.html






No comments: