Friday, October 14, 2016

மருந்து தாவரங்கள் (Herbal leaves)


சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, காசநோய் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆடாதொடை மணப்பாகு அருமருந்து. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒரு வேளைக்கு 15 மில்லி (3 தேக்கரண்டி) சாப்பிடலாம். 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 10 மில்லி கொடுக்கலாம். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வேளைக்கு 5 மில்லி கொடுக்கலாம். இதை அப்படியே சாப்பிடாமல், அரை டம்ளர் கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 5 வேளைகூட உணவுக்கு முன்போ, பிறகோ சாப்பிடலாம். கைக்குழந்தைகள் உள்ள வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய மருந்து இது. சளி, இருமல், இருமலோடு கூடிய காய்ச்சல், பேதி முதலான குழந்தை நோய்களுக்கு இது சிறப்பான மருந்து.

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-25/column/124327-herbal-medicine.art

No comments: