Thursday, October 6, 2016

சிறந்த உள்ளாட்சி 1 (Best Local Bodies in Tamil Nadu 1)

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் வடமதுரை அருகே சட்டென்று உள்வாங்குகிறது ஒரு சிறு சாலை. தடாகம் அணை மற்றும் வரதபாளையம் வனப் பகுதிக்கு செல்லும் வழி அது.

ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி நீங்கலான கழிவு நீர் அதில் வெளியேற்றப்படுகிறது. அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல், கரித்துண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மிகப் பெரிய குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் இது!


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-9-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9191972.ece

இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல கிளைகளாக விரிகின்றன மக்களுக்கான வாழ்வாதாரங்கள். நிலத்தடியில் ஆறு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது. திருமணம், அலுவலகக் கூட்டங்கள், உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர் குவிகிறது. காலையில் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு தயாராகிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-10-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article9196553.ece


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது வாவிபாளையம். நாம் அந்த கிராமத்துக்குள் நுழைந்தபோது இரவு 12 மணியாகியிருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்து நிசப்தம். தெரு விளக்கில் இருந்து வழிந்துகொண்டிருந்தது சிறுவெளிச்சம். சில நிமிடங்களில் நம்மை அழைத்துச் செல்ல வந்தார் தேவராஜ். பொடிநடையாக நடந்தோம். கொஞ்சம் கவலை சூழ்ந்தது. ‘நடுநிசி நேரம்... இந்த கிராமத்தில் எங்கு தங்குவது’ என்று எண்ணிக்கொண்டே ஒரு திருப்பத்தில் திரும்பினோம். கண் எதிரே கண்ட காட்சி சிலிர்க்க வைத்தது. சற்றே தொலைவில் ஒளிர்ந்துகொண்டிருந்தது, ‘வாவிபாளையம் மக்கள் மருத்துவமனை.’ மக்களால்... மக்களுக்காக... நடத்தப்படும் தமிழகத்தின் ஒரே 24 மணி நேர நவீன மருத்துவமனை அது.


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-13-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article9213870.ece

“எங்க கிராமத்துல மட்டுமில்லீங்க, சுத்துவட்டாரத்துல ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி உட்பட சுமார் 25 கிராமத்துல எங்கேயும் நீங்க பிளாஸ்டிக் குப்பைகளைப் பார்க்கவே முடியாது. எல்லா கிராமப் பஞ்சாயத்திலேயும் பேசி குப்பையை சேகரிக்கிறோம். அதை கிலோ ரூ.5 கொடுத்து விலைக்கு வாங்குறோம். தரம் வாரியாக பிரித்து, அதனை அரவை இயந்திரத்துல அரைக்கிறோம். சுத்துவட்டார கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு பக்கத்து மாவட்டங்களுக்கும்கூட அதனை கிலோ 25 ரூபாய்க்கு விக்குறோம். ஒரு நாளைக்கு 500 கிலோ வரைக்கும் போச்சு. அதனை சாலை போட பயன்படுத்துறாங்க. சுத்துவட்டார கிராமத்து சாலைகள், கொடைக்கானல் மலைப் பாதை, வத்தலக்குண்டு, மணலூர், தாண்டிக்குடி ஊர் சாலைகள் எல்லாம் நம்ம பிளாஸ்டிக்கால பளபளன்னு ஜொலிக்குது” என்கிறார் உற்சாகமாக.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-16-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article9226464.ece


கல்வி மட்டுமா... காந்தி கண்ட கனவை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இதுவரை ஜி. கல்லுப் பட்டியின் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 8,700 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 300 சதுர அடியில் எளிமையான வீடுகள். பஞ்சாயத்து மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் முற்றிலும் இலவசம். அரசாங்கத்தில்கூட இலவச வீடுகள் வாங்க முடியாத பயனாளி களைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்வு செய்து வீடுகளைக் கட்டித் தருகிறார்கள். வீடுகளைக் கட்டுவதற்கு கிராம மக்களை ஒருங்கிணைத்து இவர்களே ஹாலோ பிரிக்ஸ் கற்களை உற்பத்தி செய்கிறார்கள். மரங் களின் பயன்பாட்டைத் தவிர்க்க சிமெண்டி லேயே கதவு, ஜன்னல்கள் தயாரிக்கிறார்கள்.

மாசத்துக்கு ஒரு குழந்தைக்கு 650 ரூபாயும் ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி, ஒரு காஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். இந்த கிராமத்து பெண்களுக்குள்ளேயே கூட்டு றவு சங்கம் ஏற்படுத்திக்கிறாங்க. மொத்தமா மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கி பிரிச்சுக்கு வாங்க. குழந்தைகள் படிக்கிறதுக்குன்னு மேல்நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளின்னு நான்கு பள்ளிகள் அமைச்சிருக்கோம்” என்கிறார்.


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-14-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9218407.ece

No comments: