Wednesday, August 10, 2016

புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!

புறநானூறு - 141. மறுமை நோக்கின்று!

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். 
துறை: பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம்.


பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்

யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே


பொருளுரை:

வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் 
கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) 
“ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! 

நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; 
உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். 

விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, 
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! 
நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?

வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு 
முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். 
இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.

எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் 
தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் 
செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை 
எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். 

அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது


Description: (A Song About Vaiyaavikko Behan)

We who look like the Paanaas have worn golden lotuses on our heads. 
Our Viraliyar have worn golden jewels. We have untied the horses from the chariot 
and are in the forest area happily as we are in our home. 

Oh poets ! Do you want to ask who are we ? We are also like you. 
We with our relatives suffered a lot than you before seeing Behan. 
Now our condition has changed because of the gifts given by Behan. 

Though he knew that the peacock did not cover its body with a shawl,
he gave his shawl to it. 

He will give in large quantities to many. 
He does not give expecting fame and benefits in the next birth. 
He gives knowing the poverty of the people. So you go and get gifts. 

-Paranar


மூலம்:

http://puram400.blogspot.ie/2010/01/141.html


http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html


No comments: