Wednesday, July 20, 2016

புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!

புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் 
துறை: இயன் மொழி

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே

பொருளுரை:

இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி,
அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். 

அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். 
ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.


Description: (A Song About Vel Aai Andiran)

Aai is not a business man who thinks that if we do good deeds in this birth, 
it will help in the next birth. 

He patronized because it was the living way of the scholars and great people. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/12/134.html


No comments: