Thursday, July 28, 2016

மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தில் விதை நடும்போது கவனிக்க வேண்டிய சில நுட்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத் தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். 


https://senthilvayal.com/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4/


மூலிகைச் செடிகள்:
துளசி,  சோற்றுக் கற்றாழை ,  கற்பூரவல்லி, நிலவேம்பு, தூதுவளை, பிரண்டை, வெற்றிலை, அருகம்புல், மணத்தக்காளி 

https://senthilvayal.com/2016/07/26/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

Wednesday, July 27, 2016

புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!

புறநானூறு - 137. நின்பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம்.

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய

கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்

பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை

தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!


பொருளுரை:


ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், 
கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் 
நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். 

முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். 
நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை. 
அது கரும்பைப் போல் தழைக்கும். 
கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், 
மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். 

கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் 
சுமந்து நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! 

சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! 
நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!


Description:(A Song About Naanjil Valluvan)

I am the one who have not the desire to praise the three kings 
who have young elephants and the world  which has the sea as the boundary. 

I am the one who know you very earlier. 
The seed which is sowed in a pit which is full of water 
will not go waste without growing because of the scarcity of water. 
It will grow like the sugarcane. 
Though the rain fails in the summer, the water in the ponds never goes dry. 
The river water  which looks like clear gems will carry vengai flowers and run towards the sea. 
Oh lord of this fertile Naanjil hill ! 
You live long. Let your father and mother also live long. 
-Orusirai Periyanaar


முலம்:
http://puram400.blogspot.ie/2010/01/137.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

Tuesday, July 26, 2016

புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!

புறநானூறு - 136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஓடை கிழார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை சிறப்பு: 
வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி. 

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த

பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?
உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?

அன்னதன்மையும் அறிந்துஈயார்
நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?

ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்
எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;

எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்
பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்

தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே



பொருளுரை:

யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், 
என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு 
அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? 

உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் 
என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? 

எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல், 
”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், 
மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி 
செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன் என்று எண்ணி, 
உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, 
வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். 

எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள். 
மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) 
தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். 

ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. 
குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் 
அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, 
நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்


Description:(A song About Vel Aai Andiran)

Shall I say the lice in my head as my enemies ? 
Shall I say the poverty which tortures me and my relatives as my enemy ? 
Shall I say the dwarfs who seize our things like the monkeys in the hilly way as my enemies? 

We have come through this hard  forest way thinking that  you will know all our enemies and give us gifts. 
Those who help the poor are the real helpers. 
Those who help the rich are helping themselves. 

So you send us giving gifts. We will praise you to live more than the sand on the bank of Thuraiyoor. 
We will live with the wealth given by you. 
-Thuraiyoor Odaikkizhaar

முலம்:
http://puram400.blogspot.ie/2010/01/136.html
http://thamizhanna.blogspot.ie/2011/09/purananooru-135-to-150-english.html

Sunday, July 24, 2016

புறநானூறு - 135. காணவே வந்தேன்!

புறநானூறு - 135. காணவே வந்தேன்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில்.


கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்

பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி

வந்தெனன் எந்தை யானே: என்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;

ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்குஅவர்
தமதுஎனத் தொடுக்குவர் ஆயின் எமதுஎனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி; நின்னைக்

காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!



பொருளுரை:

புலிகள் திரியும் உயர்ந்த சிகரத்தையுடைய நெடிய மலையின் 
கடத்தற்கரிய பிளவுகளுடைய சிறுவழியில் ஏறி வந்ததால் வருத்தத்தோடும், 
வளைந்த உடலோடும், நடையில் தளர்ச்சியோடும் வளையல்களை அணிந்த விறலி 
என் பின்னால் வர நான் மலைப்பாதையில் வந்தேன். 

நான் வரும் வழியில், பொன்னை உருக்கிக் கம்பியாகச் 
செய்ததைப் போன்ற முறுக்கிய நரம்புகளுடைய என்னுடைய யாழ், 
இசையுடன் கூடிய பாடல்களை நிலத்திற்கேற்ப மாறி மாறி பெருமளவில் ஒலித்தது. 

என்னுடைய யாழ் படுமலைப் பண் அமைந்த பாடல்களைப் 
பாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 
அத்தகைய சிறிய யாழைத் தளர்ந்த மனத்தோடு ஒரு பக்கம் தழுவிக்கொண்டு, 
புகழ்தற்கு அமைந்த சிறப்புடைய உன் 
நல்ல புகழை நினைத்து நான் என் தலைவனாகிய உன்னிடத்து வந்தேன்.

எந்நாளும் மன்றத்திற்கு வந்த பரிசிலரைக் கண்டால் உரல்போன்ற பருத்த அடிகளுடைய 
யானைகளையும் அவற்றின் கன்றுகளையும் திரளாக வழங்கும் மலை நாட்டினனே! 
பெருமைக்குரிய வேளிர் குலத்தவனே! நான் உன்னிடத்து வேண்டுவது யனையும் அன்று; 

குதிரையும் அன்று; ஒளிமிக்க படையுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேரும் அன்று. 
பாணரும், புலவரும், பரிசிலரும் ஆகியோர் தமது என உன் பொருளை வளைத்துக் கொள்வாராயின், 
அதனை எம்முடையது என்று அவரிடமிருந்து மீண்டும் (கைக்கொள்வதை அறியாத) கைக்கொள்ளாத, 
பயனுள்ள சுற்றத்தோடு கூடியதாக உன் வாழ்நாட்கள் அமையட்டும். 

உன்னைக் காண வேண்டுமென்பதற்காகவே வந்தேன். 
பகைவருடைய மிகுந்த வலிமையை அழிக்க வல்ல ஆற்றலும், 
எவரும் புகழந்து கூறும் நாட்டையும் உடையவனே!


Description:(A song About Vel Aai Andiran)

It is a high hill where tigers live. 
In the hilly way which cannot be climbed up easily, I came with a small yaazh, 
followed by the slow walking  Paadini , Thinking about  your fame. 
Oh Aai ! You will  give elephants with their calves  to those who come to your country. 
I don't want elephants. I don't want chariots. 

You consider those who come to get gifts as your relatives, even if they possess your wealth. 
Let your living days increase like your  broad mind. 
I have come here to see you. Oh king ! 

You have conquered the enemies. 
You have a hill which is praised by many. 
Seeing you itself is a gift to me. 

-Uraiyoor Eanichcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/12/135.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-121-to-135-english.html


Wednesday, July 20, 2016

புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!

புறநானூறு - 134. இம்மையும் மறுமையும்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
திணை: பாடாண் 
துறை: இயன் மொழி

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே

பொருளுரை:

இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி,
அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். 

அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். 
ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.


Description: (A Song About Vel Aai Andiran)

Aai is not a business man who thinks that if we do good deeds in this birth, 
it will help in the next birth. 

He patronized because it was the living way of the scholars and great people. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/12/134.html


நேர்காணல்களுக்கு உதவும் இணையம்



https://aircto.com  நேர்காணல்  புற ஒப்படைப்பு

Friday, July 15, 2016

புறநானூறு - 133. காணச் செல்க நீ!

புறநானூறு - 133. காணச் செல்க நீ! பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: விறலியாற்றுப்படை மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது காண்புஅறி யலையே; காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி உளரக் கலவ மஞ்ஞையின் காண்வர இயலி மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே! பொருளுரை: மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க Description: (A Song About Vel Aai Andiran) Oh lady with soft nature ! You should have heard the good qualities of Aai but you should not have seen him. If you wish to see him go with your sweet smelling hair which moves in the wind , like the dancing peacock. If you go like that you can see Aai who will give you like the rainy cloud. So you go to see him. -Uraiyoor Eanychcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/12/133.html

Monday, July 11, 2016

புறநானூறு - 132. போழ்க என் நாவே!

புறநானூறு - 132. போழ்க என் நாவே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே


பொருளுரை:

ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! 
என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; 

பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். 
நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, 
குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு 
அதனை அடுத்துள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு 
தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. 

தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்


Description:(A Song About Vel Aai Andiran)

I should have think about you first when I  wish to get  gifts. 
But I remember you later and come to you. 

Let my heart which forgot to  think about you first perish. 
Let my tongue  which did not sing about you crack. 
Let my ears shut like the well in the ruined village. 

The Himalayas, where the kavari eats narandham grass , 
drinks water from the pond where there are kuvalai flowers 
and will be under the shadow of the thahara tree with its mate happily, is in the north. 
Aay's dynasty is in the south. 
If these two are not present the world should have gone upside down. 

-Uraiyoor Eanichcheri Mudamosiyaa

முலம்:
http://puram400.blogspot.in/2009/12/132.html

Friday, July 8, 2016

புறநானூறு - 131. காடும் பாடினதோ?

புறநானூறு - 131. காடும் பாடினதோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே?


பொருளுரை:

மிகுந்த யானைகள் உள்ள அழகான காடுகள் இம்மலையில் உள்ளனவே! 
மேகங்கள் கூட்டமாகத் தங்கும் பெரிய இம்மலைக்கு உரிமையுடையவனும் 
சுரபுன்னைப் பூவாலான மாலையைத் தலையில் 
அணிந்தவனும் குறி தவறாத வாளையுடையவனுமாகிய 
ஆய் அண்டிரனை இம்மலை பாடிற்றோ?

Description:(A Song About vel Aai Andiran)

Will these forests have praised the hill of Aai on which the rainy clouds settle ? 
Aai has worn the kanni made up of vazhai flowers and has a brave sword. 

Will the fertile forest which has plenty of fruits and vegetables 
have got these elephants as gifts for singing about him ? 

-Uraiyoor Eanichcheri Mudamosiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/12/131.html

புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?

 
புறநானூறு - 130. சூல் பத்து ஈனுமோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த

அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

பொருளுரை:

விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்!
உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ?

உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல்,
மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால்,
நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது
அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில்
விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!


Description: (A Song About Vel Aai Andiran)

Oh Aai wearing shining ornaments !
Do the female elephants in your country give birth to ten calves in one delivery ?
You gave elephants to those who came singing about you and your hill with smiling face.
Oh Aai ! If we count the number of elephants given by you ,
they will be more than the number of vels left by the Kongers
when you drove them in the western seashore.
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/11/130.html

Wednesday, July 6, 2016

புறநானூறு - 129. வேங்கை முன்றில்!

புறநானூறு - 129. வேங்கை முன்றில்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி.
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; 
          பரிசிலர்க்கு யானைகளை வழங்கல். 

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்

ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே


பொருளுரை:

குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் 
வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, 
வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், 
இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு 
உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். 

அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. 
மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி 
எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, 
வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் 
அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு 
அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்


Description: (A Song About Vel Aai Andiran)

The Kuravaas who live in the caves drink the honey 
stored in the bamboo tubes and dance kuravai dance 
under the shadow of the vengai tree. 

Aai who belongs to this hill  which has vengai trees and jack trees , 
is strong in war. He has the desire to give to those who come singing about him. 
The elephants that were given to the Paanaas 
do not equal to the stars which are in the sky which has no black clouds. 
They are more in number than the stars. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/129.html


Tuesday, July 5, 2016

புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!

புறநானூறு - 128. முழவு அடித்த மந்தி!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம். 

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

பொருளுரை:

ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, 
பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, 
அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. 

அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. 
கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் 
தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே 
தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது


Description: (A Song About Vel Aai Andiran)

There is a jack tree in the centre of the town. 
There was a monkey on a big branch of it. 

It tapped the muzhavu of the Paanaas which was hung on the tree thinking it as a jack fruit. 
When it tapped the muzhavu ,it sounded. 

On hearing the sound, the annams flew away with fear. 
Aai's hill has such a fertility. 
The Virali who has worn bangles can reach the Podhihai hill which has a lot of rain. 
But the enemies cannot reach it at any cost. 

-Uraiyoor Eanichcheri Mudamosiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/11/128.html

Monday, July 4, 2016

புறநானூறு - 127. உரைசால் புகழ்!

புறநானூறு - 127. உரைசால் புகழ்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின்.
திணை: பாடாண். 
துறை: கடைஇநிலை

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப

ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய

முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.


பொருளுரை:

களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய 
சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், 
ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு 
போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் 
வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. 

அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் 
தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. 
பிறருக்கு அளிக்க இயலாத மங்கல 
அணிகலன்கள் மட்டுமே அணிந்த 
மகளிர் ஆயின் அரண்மனையில் உள்ளனர். 

இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை 
தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர்.
ஆனால், இனிய சுவையுடன் தாளித்த 
உணவை பிறர்க்கு அளிக்காமல் 
தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, 
மிகுந்த புகழை இழந்த 
முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் 
ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.


Description: (A Song About Vel Aai Andiran)

Oh king ! As you have given all the elephants to the Paanaas 
who came with yaazh singing sweet songs,  
the elephant shed is empty and now there are peacocks. 

Your palace is now without beauty as it has no jewels to give to the singers 
except the mangala thread of your wife. 

The palaces ,where the kings eat tasty food without giving it to others, 
are not equal to aai's  palace. 
-Uraiyoor Eanichcheri Mudamosiyaar




முலம்:
http://puram400.blogspot.in/2009/11/127.html