Thursday, June 30, 2016

புறநானூறு - 125. புகழால் ஒருவன்!

 
புறநானூறு - 125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.


பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!

நள்ளாதார் மிடல்சாய்ந்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்

கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;
வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்

நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்

திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.


பொருளுரை:

அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே!
பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும்
பஞ்சு போல் மென்மையானதாகவும்,
நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில்
நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான
ஊன் துண்டுகளையும்,

பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும்
முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான
இடத்திற்கு உன்னைக் காண வந்தோம்.
உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல்
நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும்
வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான்.

வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி,
விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால்,
நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும்
தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான்.
ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு,
நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய
சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Oh lord !
We drink toddy and eat flesh which has the softness of cotton and the colour of the fire.
You have destroyed the strength of the enemies.
Like the bull which got tiredness on ploughing eats the straw,
the arrack that you drink after giving to others help you like the amudham.

The warriors who conquered the elephants which are like the moving mountains
will praise you for the victory.
The defeated will say if it is not Thirumudikkaari who opposed us,
we should have won easily.

You are the one who has greatness of being praised by your friends
and enemies like god Murugan.
-Vadama Vannakkan Perunjchaaththanaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/11/125.html

No comments: