Friday, June 10, 2016

புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!

புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை


பொருளுரை:

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;

நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

பாரி இருந்த பொழுது, 
கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த காட்சிக்கினிய நேரத்து, 
யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. 

செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை 
இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. 
அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயையும் 
உடையதாக இருந்தது பறம்பு நாடு. 

நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல்,
முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு 
வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

Description (A Song About Vel Paari)

It is a rainy season morning. It has just rained. 
The flowers of  theruzh blossom like the dots on the black  face of the elephant. 
The tamarind sauce is prepared  with termites and butter milk. 
It has the new income of the thinai. 

Parambu was like a shadow giving tree in a  way there is no shadow. 
Paari gave gifts to those who came saying that they had nothing. 
He gave more than other kings. 
Alas !! His Parambu  has ruined now. 

-Kapilar

முலம்:


No comments: