Thursday, June 9, 2016

புறநானூறு - 118. சிறுகுளம் உடைந்துபோம்!

புறநானூறு - 118. சிறுகுளம் உடைந்துபோம்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 


அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!



ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

பொருளுரை:

பாறைகளும் சிறு குன்றுகளும் கூடிய இடத்தில் 
எட்டாம் பிறைத் திங்கள் போல் வளைந்த கரையைக்கொண்ட 
தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பது போல், 
கூரிய வேலும் திரண்ட வலிய தோள்களும் 
தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் 
உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ?


Description: (A Song About Vel Paari)

The pond which has rocks and hills  on both sides 
and has a bank which looks  like the eighth day crescent moon has become ruined 
as there  is none to care for it. 

Alas ! Like that pond, the beautiful Parambunaadu has perished 
after the death of Paari who had sharp vel 
and broad shoulders and who gave chariot to the mullai creeper.

-Kapilar


முலம்:



No comments: