Thursday, June 2, 2016

புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!

புறநானூறு - 113. பறம்பு கண்டு புலம்பல்!

பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
சிறப்பு : நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம். 


மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,

பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.



பொருளுரை:

பறம்பு மலையே! முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது; 
ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய 
கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய 
அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது. 

அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய். 
பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது, 
பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று நீர் வடியும் 
கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி, 

அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வலையல்களை 
அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு 
உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம்.



Description: (A Song About Vel Paari)

Oh Parambu ! 
Once you were fertile, giving arrack, food with goat's flesh and gifts. 

But now, as Paari has died , 
his daughters who have worn bangles on their arms are going with tears in search of husbands, 
who rub their fragrant hair. 
We are leaving you. 
Let your praise be long live. 

-Kapilar


முலம்:

No comments: