Thursday, June 30, 2016

புறநானூறு - 126. கபிலனும் யாமும்!

புறநானூறு - 126. கபிலனும் யாமும்!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: பரிசில்

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!

வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய

நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்

பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப

அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய
அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!



பொருளுரை:

பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் 
பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், 
சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! 
யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும் 
விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். 

இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் 
பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! 
அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக.

இவ்வுலக மக்கள் எல்லாரினும் தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், 
இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று 
கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். 

சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு 
வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. 
அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். 

ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு 
உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். 
முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, 
யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய 
போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, 
பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Oh king you are the successor of a great family. 
You melt the ornaments on the foreheads of the enemies' elephants, 
make them as golden lotus and adorn the Paanaas' heads who come singing about you. 

We are not able to sing your fame. Oh king of the Mulloor hill ! 
You have dark forests  which look like the sleeping night and singing water falls. 
We have come to sing about you. Let your family and dynasty get greatness. 
Kapilar who has sung your fame so much so that  there is nothing to sing about you. 

Can we sing new about you ? When Seran's vessel sails on the western sea, can the vessels of others go there ? 
Like that after kapilar's song we cannot sing. 
We  have come to sing about you in order to drive away our poverty. 
Oh king ! You are the lord of the country which is on the bank of the Pennai river. 

You are killing the enemies' elephant army with your elephant army 
which goes with the sound of the murasu which sounds like thunder which frightens the cobras. 
You give us gifts hearing our songs too. 

-Maarokkaththu Nappasalaiyaar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/126.html



புறநானூறு - 125. புகழால் ஒருவன்!

 
புறநானூறு - 125. புகழால் ஒருவன்!

பாடியவர்: வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: தேர்வண் மலையன்.
திணை: வாகை.
துறை: அரச வாகை.


பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!

நள்ளாதார் மிடல்சாய்ந்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்

கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;
வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்

நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்
தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்

திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.


பொருளுரை:

அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே!
பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும்
பஞ்சு போல் மென்மையானதாகவும்,
நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில்
நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான
ஊன் துண்டுகளையும்,

பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும்
முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான
இடத்திற்கு உன்னைக் காண வந்தோம்.
உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல்
நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும்
வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான்.

வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி,
விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால்,
நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும்
தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான்.
ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு,
நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய
சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Oh lord !
We drink toddy and eat flesh which has the softness of cotton and the colour of the fire.
You have destroyed the strength of the enemies.
Like the bull which got tiredness on ploughing eats the straw,
the arrack that you drink after giving to others help you like the amudham.

The warriors who conquered the elephants which are like the moving mountains
will praise you for the victory.
The defeated will say if it is not Thirumudikkaari who opposed us,
we should have won easily.

You are the one who has greatness of being praised by your friends
and enemies like god Murugan.
-Vadama Vannakkan Perunjchaaththanaar
முலம்:
http://puram400.blogspot.in/2009/11/125.html

Tuesday, June 28, 2016

புறநானூறு - 124. வறிது திரும்பார்!

புறநானூறு - 124. வறிது திரும்பார்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே.


பொருளுரை:

நல்ல நாளன்று போகாவிட்டாலும், 
போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் 
குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், 

மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் 
அவன் அவைக்குள் நுழைந்தாலும், 
தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் 
இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய 
பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் 
பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு 
திரும்ப மாட்டார்கள்.


Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Though the day is not good, 
though the birds show bad omen,
though you go in a time which is not suitable, 
though you praise him with meaningless words, 

Thirumudikkaari who belongs to Mulloor hill 
where the water falls are sounding continuously 
will give to those who sing abot him. 
They won't return with empty hands. 

-Kapilar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/124.html

Monday, June 27, 2016

புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!

புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 


நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்

பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

பொருளுரை:

பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் 
மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் 
பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. 

ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் 
மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு 
மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த 
வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் 
பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த 
மழைத்துளிகளைவிட அதிகம்.


Description: (A song About Malaiyamaan Thirumudikkaari)

It is easy for any one to give chariots 
as gifts to others when sitting happily 
in the court yard with drunkenness. 

But Thirumudikkaari , who has imperishable fame will give  
decorated chariots to other  
even if he is not in a drunkenness state. 

The chariots given by him are 
more than the rain drops 
which rain on the Mulloor hill. 
-Kapilar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/123.html


Tuesday, June 14, 2016

புறநானூறு - 122. பெருமிதம் ஏனோ!

புறநானூறு - 122. பெருமிதம் ஏனோ!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 

கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை

மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை

நினதுஎன இலைநீ பெருமிதத் தையே


பொருளுரை:

வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! 
உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; 

அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். 
அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது. 

குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய 
மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று உன்னைப் புகழ்ந்து 
உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. 

அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய 
உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், 
வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.


Description: (A Song About Malaiyamaan Thirumudikkaari)

Oh Kaari wearing brave kazhals ! 
Your country cannot be destroyed by the sea. 

It cannot be captured by your enemies. 
It is the possession of the Andhanaas who light the velvi fire. 
The tributes which were given by the three kings are used 
for giving those who sing about you. 

It is your aim to give all except 
your wife who has chastity like Arundhadhi, 
sweet words and soft shoulders. 
Oh what a greatness you have! 

-Kapillar


முலம்:
http://puram400.blogspot.in/2009/11/122.html

Monday, June 13, 2016

புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!

புறநானூறு - 121. புலவரும் பொதுநோக்கமும்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல். 
துறை: பொருண் மொழிக் காஞ்சி

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்

அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

பொருளுரை:

ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து, 
பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும் 
மக்கள் பலரும் வருவர். 

பெரிய வண்மையுடைய அரசே! 
(தகுதியை ஆராயமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது. 
அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப் 
பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும். 
அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால், 
புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக)
மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக


Description (A Song About  Malaiyamaan Thirumudikkaari)

Trusting one who gives all, many will come from all the four directions. 
To give them is easy. 

But giving according to their standard is very hard. 
So  , oh king having the fame of giving ! 
Avoid thinking all alike if you wish to give according to their standard. 
-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/11/121.html

Saturday, June 11, 2016

புறநானூறு - 120. கம்பலை கண்ட நாடு!

புறநானூறு - 120. கம்பலை கண்ட நாடு!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்

களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி
மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்

தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்
கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்

பெருந்தோள் தாலம் பூசல் மேவர
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்

ஓடுகழல் கம்பலை கண்ட
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

பொருளுரை:

வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில் 
கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு 
உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர். 

அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு 
மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர். 
பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள் 
அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி, 
கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய 
மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன. 

எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும் 
காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர். 

தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன. 
அவரையின் வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன. 
நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட 
குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். 

மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து 
அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர். 
கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி, 
அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன். 

அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன். 
பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன். 
அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன். 

அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு. 
அந்நாடு அழிந்துவிடுமோ?

Description (A Song about Vel Paari)

It is a red soil land where there are a lot of vengai trees. 
The rain has stopped. 
The wet land is ploughed and seeds are sowed. 

The weeds are removed. 
The ears of varahu and thinai plants are harvested. 

The seeds of sesame and beans are plucked. 
The arrack that was kept  under the earth 
is served to the people who are in the grass thatched huts. 

The wives serve the peanut roasted with ghee and cooked rice in big plates. 
The Parambu hill is very fertile. 

The daughters of Paari hear the sound of the chappals of the enemies who run back. 
Paari does not like to follow them driving. He has boundless fame. 

In Parambu hill, the bamboo trees are waving in the wind. 
As Paari is not  alive now, his country 
has lost its fertility and has become ruined. 

-Kapilar

முலம்:


Friday, June 10, 2016

புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!

புறநானூறு - 119. வேந்தரிற் சிறந்த பாரி!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
சிறப்பு: 'நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை


பொருளுரை:

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;

நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

பாரி இருந்த பொழுது, 
கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த காட்சிக்கினிய நேரத்து, 
யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. 

செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை 
இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. 
அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயையும் 
உடையதாக இருந்தது பறம்பு நாடு. 

நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல்,
முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு 
வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

Description (A Song About Vel Paari)

It is a rainy season morning. It has just rained. 
The flowers of  theruzh blossom like the dots on the black  face of the elephant. 
The tamarind sauce is prepared  with termites and butter milk. 
It has the new income of the thinai. 

Parambu was like a shadow giving tree in a  way there is no shadow. 
Paari gave gifts to those who came saying that they had nothing. 
He gave more than other kings. 
Alas !! His Parambu  has ruined now. 

-Kapilar

முலம்:


Thursday, June 9, 2016

புறநானூறு - 118. சிறுகுளம் உடைந்துபோம்!

புறநானூறு - 118. சிறுகுளம் உடைந்துபோம்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 


அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!



ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

பொருளுரை:

பாறைகளும் சிறு குன்றுகளும் கூடிய இடத்தில் 
எட்டாம் பிறைத் திங்கள் போல் வளைந்த கரையைக்கொண்ட 
தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பது போல், 
கூரிய வேலும் திரண்ட வலிய தோள்களும் 
தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் 
உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ?


Description: (A Song About Vel Paari)

The pond which has rocks and hills  on both sides 
and has a bank which looks  like the eighth day crescent moon has become ruined 
as there  is none to care for it. 

Alas ! Like that pond, the beautiful Parambunaadu has perished 
after the death of Paari who had sharp vel 
and broad shoulders and who gave chariot to the mullai creeper.

-Kapilar


முலம்:



Tuesday, June 7, 2016

உதவித்தொகை பற்றிய இணையத்தளம்

http://www.motachashma.com/

http://www.buddy4study.com/scholarships

இலவச இணைய கல்வி

https://alison.com/

https://www.coursera.org/

https://www.futurelearn.com/

https://www.edx.org/course

http://gocode.academy/    Front end and back end web technologies


ரோஷிணி முகர்ஜி. இணையத்தில் இலவசப் பாடம் எடுக்கும் ஆன்லைன் ஆசிரியர். தன்
www.examfear.comஇணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலமாக, ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ வகுப்புகளாக எடுக்கிறார். 

http://www.vikatan.com/avalvikatan/2017-jul-25/inspiring-stories/132704-meet-roshni-youtube-teacher-students.html  

புறநானூறு - 117. தந்தை நாடு!

புறநானூறு - 117. தந்தை நாடு!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்

ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்

ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

பொருளுரை:

சனி சில இராசிகளிலிருந்தாலும், 
வால் நட்சத்திரம் தோன்றினாலும், 
சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் 
உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து 
தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. 

அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், 
பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; 

புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; 
வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் 
தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு 
நல்ல புல்லை நிரம்பத் தின்னும்; 

செம்மையான ஆட்சி நடைபெறுவதால் 
சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; 
புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். 
பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், 
பசுமையான முல்லை அரும்பு போன்றதும் 
ஆகிய பற்களை உடைய, 
அழகிய வளையல்களை அணிந்த பாரி 
மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் 
காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. 

ஆனால், இன்று வளம் குன்றியது


Description: (A Song About Vel Paari)

Though the black Saturn  appears with smoke, 
darkness spreads in all directions, 
Venus moves towards south, 
the  fields are yielding rich, 
flowers blossom on the bushes, 
the mother cows craze the grass stomachful as there is righteous rule. 

There are so many scholars, the rain never fails, 
the buds of  mullai are like the teeth of the young cat. 
The father of these girls who have worn beautiful bangles is Paari. 
This Parambunaadu belongs to Paari. 
But now it has lost all its fertility and has become a barren land. 
-Kapilar

முலம்:

Sunday, June 5, 2016

புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!

புறநானூறு - 116. குதிரையும் உப்புவண்டியும்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை 


தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்

பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!

பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும்
பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே

அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.

பொருளுரை:

இனிய நீருடைய ஆழமான சுனைகளில் பூத்த, 
புறவிதழ்கள் ஒடிக்கபடாத முழு செங்கழுநீர் மலர்களால் செய்த ஆடைகள் தங்கள் இடுப்பில் புரளுமாறு, 
மிகுந்த அழகும், கருமை நிறமுள்ள கண்களும், 
இனிய சிரித்த முகமும் உடைய பாரி மகளிர் அணிந்திருக்கிறர்கள். 

அவர்கள் இருக்கும் சிறிய வீடு பல தெருக்கள் கூடுமிடத்தில் புல் முளைத்த பாதைகளுடையதாகவும், 
முற்றத்தில் பஞ்சு பரந்தும் முள் செறிந்த வேலியால் அடைக்கப் பட்டதாகவும் உள்ளது. 

அங்கே பீர்க்கங்காய்களும் சுரைக்காய்களும் கொடிகளில் முளைத்திருக்கின்றன. 
அவற்றிற்குப் பக்கத்தில் ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில் 
ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள். 

முன்பு, அவர்கள் வாழ்ந்த பறம்பு மலையில், அவர்களுக்குப் பழக்கமான 
பூஞ்சோலைகளில் மயில்கள் எழுந்து ஆடின; மற்றும் குரங்குகள் தாவித் திரிந்தன; 

அக்குரங்களும் தின்னமுடியாத அளவுக்கு அங்குள்ள மரங்கள் பயனுள்ள பழங்களும் 
காய்களும் பருவமல்லாக் காலத்தும் கொடுத்தன. 

அத்தகைய வளம் மிகுந்த இடமாகப் பறம்பு மலை இருந்தது. குறையாது புதுவருவாயை அளிக்கும் 
அகன்ற மலையைப் போன்ற தலைமையுடைய பாரியின் நெடிய மலையின் உச்சியில் ஏறி, 

மிகுந்த அளவில் கள்ளையும் கூரிய வேலினையும் உடைய தந்தை பாரியின் 
அருமையை அறியாது அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த வலிமைமிக்க படையுடைய வேந்தர்களின் 
அழகிய சேணங்களணிந்த செருக்குடைய குதிரைகளை எண்ணிய பாரி மகளிர் இப்பொழுது 
குப்பை மேட்டில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களே! 

இதைக் காணும் பொழுது நான் வருந்துகிறேன். 
என் வாழ்நாள்கள் (இன்றோடு) முடியட்டும்.

Description: (A Song About Vel Paari)

The daughters of Paari are wearing the dresses made up of kuvalai flowers on their waist. 
They have very beautiful cold eyes and smile. 

They are in the front yard of their small house where the grass is spread. 
There is a fence made up of thorns. 

On the garbage heap, the ribbed gourd and bottle gourds are spread. 
The daughters of Paari stand on the garbage heap and count the salt loaded carts of the salt merchants. 

But once they were in the parks where the peacocks were dancing. 
There the fruits were spread everywhere by the monkeys while they sprang. 

Not only in the season, there were fruits ever. 
The hill had new yield. 

The daughters of Paari were standing on the hill and counting the horses of the enemies 
who did not know the fame and strength of Paari. 

But today , they are standing on the garbage heap and counting the salt loaded carts. 
On seeing this my mind suffers. 
Eventhough seeing this cruelty, I am living. 
Let my living days perish. 

-Kapilar

முலம்: