Friday, May 27, 2016

புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!

புறநானூறு - 110. யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: ..மகள் மறுத்தல்.
சிறப்பு: 'மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்.

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்

யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

பொருளுரை:

வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய
நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது.

குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது.
அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர்.

எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான்.
நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும்,
எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.


Description:(A Song About Vel Parri)

Oh kings!
Though you three fight together , you cannot get Paari's Parambunaadu.

The Paanaas have got the three hundred villages as gifts.

Paari, myself and Parambu hill are still left here as gifts if you come singing to get gifts.

-Kapilar

முலம்:
http://puram400.blogspot.in/2009/10/110.html
http://thamizhanna.blogspot.in/2011/09/purananooru-101-to-110-english.html

No comments: