Saturday, May 14, 2016

புறநானூறு - 100. சினமும் சேயும்!

 
புறநானூறு - 100. சினமும் சேயும்!


பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.

கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு

வெட்சி மாமலர் வேங்கையடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே;

செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே.


பொருளுரை:

கையிலே வேல்;
கால்களிலே அழகான கழல்கள்;
உடலிலே வியர்வை;
கழுத்திலே ஈரம் ஆறாத புண்;

பகைவரை அழிப்பதற்காக,
வளரும் இளம் பனங்குருத்தின் உச்சியில் உள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டையும்,
வெட்சியின் பெரிய மலர்களோடு வேங்கைப் பூவும் கலந்து சுருண்ட,
கரிய முடியில் அழகுறச் சூடி,

புலியோடு போரிட்ட வலிய யானையைப் போல
இன்னும் நீங்காத சினத்துடன் அதியமான் உள்ளானே!

இவனுடன் சினந்து போரிட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள்.
பகைவரைப் பார்த்த கண்கள் தன் புதல்வனைப் பார்த்தும்
சிவப்பு நிறம் குறையாமல் இருக்கின்றனவே!

Description:(A Song About Adhiyamaan Nedumaan Anji)

You have vel in your hand,
kazhal on your legs,
sweat on your body,
fresh wound on the neck,
garland made up of palm flowers on your head, a
nd black, spring like hair adorned with vetchi and vengai flowers.

You are standing with anger like a strong elephant which has fought with the tiger which has lines on its body.
Alas ! Those who against you cannot escape.
The eyes which look his enemies with
fire like red colour do not change
even after seeing his lovely son.

-Avaiyaar

முலம்:
http://puram400.blogspot.in/2009/09/100.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-71-to-100-english.html

No comments: