Friday, April 1, 2016

புறநானூறு - 66. நல்லவனோ அவன்!

புறநானூறு - 66. நல்லவனோ அவன்!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. 
துறை : அரச வாகை. 

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!


பொருளுரை:

காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! 
செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே! 
மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், 
முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?


Description: (A Song About Karikaal Peruvalaththaan)
Oh successor of those who sailed in the vast sea knowing the nature of the wind ! 
Oh Karikaal Valavaa having big elephant army ! 
You have succeeded in the war showing your strength. 

But your enemy who left his life in the Venni battle field 
feeling shame for the wound on his back and got great fame is better 
than you who succeeded in the war. 

-Vennikkuyaththiyaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/66.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html



No comments: