Wednesday, March 30, 2016

புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!

புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!

பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். 
துறை : விறலியாற்றுப்படை. 

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்

பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

பொருளுரை:

சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! 
யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், 
ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைத் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, 
கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, 
நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?


Description:(A Song About Paandiyan Palyaahasalai Mudhukudumi Peruvazhudhi)

Oh Virali wearing a few bangles ! 
Start with your yaazh, parai and muzhavu. 

In the vast army camp where herds of elephants are fighting, 
there is the flesh of the enemies which stop the eagles from going up. 

Let us go and see Mudhukudumi Peruvazhudhi who fought against the enemies and had great fame. 
On seeing him we can leave this mean life of eating gruel. 
-Nedumpalliyaththanaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/64.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

No comments: