Thursday, March 31, 2016

புறநானூறு - 65. நாணமும் பாசமும்!

புறநானூறு - 65. நாணமும் பாசமும்!

பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல். 
துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு. 

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த

புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக்கு இருந்தனன் ஈங்கு
நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே!

பொருளுரை:

முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. 
அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. 
வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. 
சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள் நடைபெறவில்லை. முழுமதி தோன்றும் பெருநாளில், 
ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு சுடர்களும் ஒன்றையொன்று எதிர்நின்று பார்த்து, 

அவற்றுள் ஒருசுடர் ஒளி குறைந்து மாலைப்பொழுதில் மலையில் மறைந்தது போல், 
தன்னைப் போன்ற ஒருவேந்தன், மார்பைக் குறிவைத்து எறிந்த வேலால் 
முதுகில் உண்டாகிய புண்ணால் நாணமுற்று, வீரப்பண்புடைய சேரன் தன் வாளோடு வடக்கிருந்தான். 
அதனால், இங்கே. முன்பு இருந்ததுபோல் பகல் பொழுதுகள் கழிய மட்டா.

Description: (A Song About Seramaan Perunjcheralaadhan)
The muzhavus lost being pasted with soil. 
The yaazhs forgot music. 
The broad , big pots laid without persons who chyrn curd as there was no milk. 
Without drinking honey the relatives were bverysad. 

There was not the farmers' ploughing sound. 
It was why that village had lost its festive beauty. 
On the full moon day, though the moon and the sun appear in the east and west, 
the sun sets in the mountain in the evening. 

Like the disappearance of the sun , 
the brave king felling shame sat with his sword and left his life 
as he had got wound on his back. 

So for us who live without him, the day too will not pass sweetly. 
-Kazhaaththalaiyaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/65.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

Wednesday, March 30, 2016

புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!

புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!

பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். 
துறை : விறலியாற்றுப்படை. 

நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்பப்

பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

பொருளுரை:

சில வளையல்களை மட்டுமே அணிந்த விறலியே! 
யானைக் கூட்டங்கள் போரிட்ட அகன்ற இடங்கள் உள்ள போர்க்களத்தில், 
ஆகாயத்தில் பறக்கும் பருந்துகளைத் பசுமையான ஊன் துண்டங்கள் தடுக்கும் பகைவர் நாட்டில் பொருந்திய முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு, 
கஞ்சி குடிக்கும் வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, 
நல்ல யாழையும், சிறுபறையையும், ஒருதலை மாக்கிணையும் எடுத்துக் கட்டிக்கொண்டு செல்லுவோமா?


Description:(A Song About Paandiyan Palyaahasalai Mudhukudumi Peruvazhudhi)

Oh Virali wearing a few bangles ! 
Start with your yaazh, parai and muzhavu. 

In the vast army camp where herds of elephants are fighting, 
there is the flesh of the enemies which stop the eagles from going up. 

Let us go and see Mudhukudumi Peruvazhudhi who fought against the enemies and had great fame. 
On seeing him we can leave this mean life of eating gruel. 
-Nedumpalliyaththanaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/64.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

Tuesday, March 29, 2016

புறநானூறு - 63. என்னாவது கொல்?

புறநானூறு - 63. என்னாவது கொல்?

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;

தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே;
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென

வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்

காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே?

பொருளுரை:

எத்தனை யானைகள் அம்பால் தாக்கப்பட்டுத் தொழிலின்றி இறந்தன!
வெற்றிப் புகழ் கொண்ட பெருமைக்குரிய குதிரைகள் எல்லாம் வலிமை வாய்ந்த படைவீரர்களுடன் போர்க்களத்தில் மாண்டன.

தேரில் வந்த வீரர்கள் எல்லாம் தாம் பிடித்த கேடயம் தங்கள் கண்களை மறைக்க ஒருங்கே இறந்தனர்.
இறுகக்கட்டப்பட்ட, மயிருடன் கூடிய முரசுகள் அவற்றைத் தாங்குவோர் இல்லாமல் கிழே கிடந்தன.

சந்தனம் பூசிய மார்பில் நெடிய வேல் பாய்ந்ததால் இரு வேந்தர்களும் போர்க்களத்தில் இறந்தனர்.
வயலில் விளைந்த ஆம்பல் தண்டால் செய்த வளையலணிந்த கையினை உடைய மகளிர் பசிய (வளமான)
அவலை உண்டு குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும், புது வருவாய் குறையாத அழகிய குடியிருப்புகள்
அடங்கிய அகன்ற இடங்களை உடைய நாடு இனி என்ன ஆகுமோ?


Description: (A Song About Seran Kudakko Nedunjcheralaadhan and Sozhan Perunarkkilli)
So many elephants died by attacked with arrows.
The horses having victorious fame died with their warriors.
The chariot warriors died as their shields hid their eyes.

The black faced victorious drum which was covered with the leather of the bull
which was not shaved laid without players.

The vels pierced the sandal applied chests of the two great kings and they were dead.
There is nothing more to worry about.
Their fertile land has vast places where the ladies who had worn bangles
made up of the stem of aambal plant ate rice flakes and played in the water.

These two lands were perished due to the war. -Paranar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/63.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

Monday, March 28, 2016

புறநானூறு - 62. போரும் சீரும்!

 
புறநானூறு - 62. போரும் சீரும்!

பாடியவர்: கழாத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி.
குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
திணை: தும்பை.
துறை : தொகை நிலை.

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்

எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;

பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே;
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே!

பொருளுரை:

இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி?
அப்போர்க்களத்தில் சண்டையிட்டு அங்கே புண்பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக்,
குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலைமயிரைக் கோதிய,
ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப்பெண்கள், மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான தாளத்திற்க்கேற்ப ஆடுகின்றனர்.

இறந்த படைவீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன.
அத்தகைய படையோடு, சினந்து அறவழியில் போர்புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர்.
அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன.
நூற்றுக்கணக்கான படைவீரர்கள் அடங்கிய பலவகைப் படைகளும் இருக்க இடமில்லாதபடி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில்,
போர்க்களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது.
மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக்கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர்.
வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக.


Description: (A Song About Seran Kudakko Nedunjcheralaadhan And Sozhan Perunarkkilli)
It is very ignorant to think that we will get victory in the coming war.
The black devil dig the wound of the dead warriors and stroke their hair with their blood stained hands and hear the mild sound of the drum played by the ladies.

The eagles will be circling to eat the dead bodies. In this cruel war both the kings who fought died.

Their white umbrellas fell down. The victorious drums perished. The army camps which were filled with warriors became empty.
The war which frightened those who saw ended like this. The ladies who lost their husbands in the war did not eat even greens.
 They did not bathe . They laid down embracing the dead bodies of their husbands.
The warriors fought in such a way so that they became the guests of heaven where there are Suraas who have garlands which do not dry,
 eyes which do not wink and amudham as their food. Oh warriors ! Let your fame live. -Kazhaaththalaiyaar

முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/62_01.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html

Saturday, March 26, 2016

புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. 
துறை; அரச வாகை. 

கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்

புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்

குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து
செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும்
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனில்

தாமறி குவர்தமக்கு உறுதி; யாம்அவன்
எழு திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது
திருந்துஅடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே!

பொருளுரை:

கொண்டையாக முடிந்த முடியும், முடியில் செருகிய தழையும் உடைய மருதநிலப் பெண்கள், 
சிறிய வெள்ளாம்பலுடன் ஆம்பலையும் களைவர். 

வயல்களில் மலங்கு மீன்கள் ஒளிருகின்றன. 
அந்த வயல்களில் தளம்பைப் பயன்படுத்தியதால், 
பருத்த வாளை மீன்கள் துண்டிக்கப் படுகின்றன. 

புதுநெல்லைக் குத்தி ஆக்கிய வெண்மையான சோற்றின் மேல் அந்த வாளைமீன் துண்டுகளைத் தூவி, 
விலாப் புடைக்க உண்ட மயக்கத்தால், 
நெடிய நெற்கதிர்களின் கட்டுகளை வைக்கும் இடம் தெரியாமல் உழவர்கள் தடுமாறுவர். 
வலிய கைகளையுடைய உழவர்களின் இளஞ்சிறுவர்கள் தென்னை மரங்கள் தரும் தேங்காய்களை வெறுத்துத், 
தம் தந்தையரின் குறுகிய இடங்களில் உள்ள நெடிய வைக்கோற் போரில் விரைந்து ஏறி பனம்பழத்தைப் பறிக்க முயல்வர். 

நாள்தோறும் புதிய வருவாயையுடைய நல்ல நாட்டிற்கு அரசனாகிய நலங்கிள்ளி சேட்சென்னி, 
வேல் ஒளிரும் பெரிய கையினையும் நன்கு செய்யப்பட்ட தேரையும் உடையவன். 

ஒளி நிறைந்த மலர் மாலைகளை அணிந்த மார்பையுடைய சேட்சென்னியுடன் போர்புரிபவர்கள் இருப்பார்களானால், 
அவர்களுக்கு நேரப் போவதை அவர்கள் மட்டுமே அறிவார்கள். 

நாங்கள் கணையமரம் போன்ற வலிய தோள்களையுடைய அவனோடு போரிட்டவர்கள் வாழக்கண்டதில்லை. 
விரைந்து சென்று அவனது நல்லடியை அடைய வல்லோர் வருந்தக் கண்டது அதனினும் இல்லை.


Description: (A Song About Sozhan Ilavandhigaippalli Thunjchiya Nalangkilli Setchchenni)
The farm maids have tied up hair adorned with cold leaves. 
They weed out aambal plants and neidhal plants which grow among the crops. 

In the fertile field the malangu fishes are squirming. 
The farmers eat vaalai fish curry with rice stomachful. 
They amaze where to store the paddy ears. 
The small headed children of the strong handed farmers do not like to eat coconuts. 

They climb up the heap of paddy and try to pluck the palm fruits. 
Setchchenni has long hand with vel and has beautiful chariot. 
His fertile land has new income everyday. 
He has worn colourful garlands which look like rainbows on his chest. 

Those who come to fight against him know their end. 
We don't see those who fight against him who has pillar like shoulders escape and live. 
Like that, we also don't see those who obey him suffer. 

-Madhurai Kumaranaar



முலம்:
http://puram1to69.blogspot.in/2011/04/61_01.html
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-61-to-70-english.html



புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!

 
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!

பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவைநிலை.

ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்

காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும்,
முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி!

பொருளுரை:

நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன்.
நீ என்றும் பொய்யே கூறமாட்டய். உன் பகைவர்க்கு,
நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு,
நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

Description: (A Song About Siththira Maadaththu Thunjchiya Nanmaaran)

Oh Paandiyaa king having beautiful chest with long pearl garlands
and long hands which touch the knees !

You are so strong in showing kindness.
You never know to speak lie.
You are like the hot sun which rises fron the sea to your enemies,
but you are like the cold moon to the poets like us.

-Madhurai Koolavaanihan Seeththalai Saaththanaar


முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-56-to-60-english.html

புறநானூறு - 60. மதியும் குடையும்!

புறநானூறு - 60. மதியும் குடையும்!


பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண். 
துறை : குடை மங்கலம்.

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த

சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்

வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.


பொருளுரை:

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, 
சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. 

அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, 
சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? 
அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு 
மலை நட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் 
வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். 

அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். 
வெயிலை மறைபப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது 
அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.


Description: (A Song About Sozhan Thirumaavalavan)
The red star shines in the sky as the light which is lighted in the boat in the sea. 
On seeing the full moon the peacocks dance joyfully. 

I and the Virali, who has worn some bangles , 
who were coming through the forest way saw the full moon and worshiped it several times. 

Our lord Sozhan Thirumaavalavan is like a bull 
which is capable of pulling a salt loaded cart from the seashore to a mountain land. 

He has victorious drum and sword. 
We worshiped the full moon thinking that it is the white umbrella erected by the Sozhaa 
to hide the sun. Now we are seeing his white umbrella. 
It is not necessary to tell us to worship it. 

-Uraiyoor Maruththuvan Dhaamodharan
முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-56-to-60-english.html

Wednesday, March 23, 2016

புறநானூறு - 58. புலியும் கயலும்!

புறநானூறு - 58. புலியும் கயலும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.
குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.
திணை: பாடாண். 
துறை : உடனிலை. 

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது

நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
1
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்

நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்

தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே.

பொருளுரை:

நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, 
பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், 
அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், 
முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத், 
தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன்.

நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், 
கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன்.

பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் 
அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? 
உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!

நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, 
பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், 
உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி, அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், 
இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், 
வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.


Description: (A Song About Kuraappalli Thunjchiya Perundhthirumaavalavan And velliyambalaththu Thunjchiya Peruvazhudhi)
Oh Sozhaa king ! You are the lord of Kaaviri which has cold water. 
Paandiyaa king is like a young bull of the Paandiyaa dynasty. 

He did not loose his heart as his ancestors had passed away. 
He saved the fame of his dynasty like the prop root of the banyan tree which supports it when its foot has completely perished. 
Like the thunder which kills the snakes, he destroyed his enemies in his young age. 

Oh Sozhaa king ! You are the king of Uraiyoor where righteousness grows. 
Paandiyaa rules multi storeyed Madhurai. 
There paddy and water are easily available to everybody. 

In Madhurai there ae rarely available Podhigai sandal and Korkkai pearls. 
He is ruling Madhurai where three kinds of drums are sounding and where Thamizh is growing. 

If you both who have strength be together like this, the enemies will afraid. There is no other scene sweeter than this. 
If you both sit together , it will resemble Balaraaman who has milk like colour and palm tree flag 
and Thirumaal who has sapphire like colour, sitting together. Listen to me. Let your fame live long. 
Let you be helpful to each other. If you both stood like this, the world which is surrounded by the sea having sounding waves will be yours.

 You go in the righteous path. You stand in favour of justice. You keep good characters established by nobles. 
You don't listen to the evils' words which will bring enmity among you. 
Let your friendship be like today. Let your vels get fame because of your victories in the wars. 
Let the enemies' countries which have hills have the symbol of the tiger which has bent lines and the symbol of the fish which lives in water. 
-Kaavirippoompattinaththu Kaarikkannanaar

முலம்:
http://thamizhanna.blogspot.in/2010/10/purananooru-56-to-60-english.html




Tuesday, March 22, 2016

புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

 
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி.
துறை : துணை வஞ்சி.

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்

நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்

கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

பொருளுரை:

திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும்,
உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன்.
சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன்.

அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில்,
வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்;

அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல்,
பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில்,
உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.


Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)

Though they are illiterate or scholars, you save them who praise you like Thirumaal.
Oh Maaraa ! You have plenty of fame which cannot be told.
I will tell you one. Let your warriors take the yield of your enemies' fields.

Let them destroy their big towns by lighting fire. Let your vel, which shines like the lightning, kill your enemies.
But you don't cut down the guarding trees because they are tender trees. They are not useful to tie up your strong elephants.
-Kaavirippoompattinaththu Kaarikkannanaar

Monday, March 21, 2016

புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!

புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை : பூவை நிலை. 

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,

மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்

தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;

ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்

ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்

நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.


பொருளுரை:

காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, 
நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், 
நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், 
கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். 

கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். 
நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். 

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். 
இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; 
வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; 
நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். 

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? 
அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, 
ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக.

ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் 
மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் 
இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.



Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)

Siva has ox flag, fire like red hair and blue coloured throat. He is holding a mazhu. 
Balaraaman has the colour of the beautiful sangu born in the sea. He has a killing plough and a palm flag. 
Thirumaal has a beautiful body like the pure sapphire and has an eagle flag. 
Murugan has a rooster flag and a victorious vel. He has a peacock as his vehicle. 
Among these four gods , you are like Siva in anger, Balaraaman in strength , Thirumaal in fame and Murugan in finishing what you wish. 

As you are like the god for that action, there is nothing impossible for you. 
You are giving valuable jewels to those who come to you with a desire to get gifts. 
Oh Maaraa having victorious fame ! You drink the wine imported from Greece daily.
It is served in golden cups by beautiful ladies. 

Like the red sun which drives away darkness from the beautiful sky and 
the crescent moon which appears in the west you long live with stable fame. 
-Madhurai Kanakkaayanaar Mahanaar Nakkeerar

முலம்:

புறநானூறு - 55. மூன்று அறங்கள்

 
புறநானூறு - 55. மூன்று அறங்கள்

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ.

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!


பொருளுரை:

உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு,
ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து,
பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின்
அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்
மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!

கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை,
விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை,
உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை,
நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும்,
பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும்.

அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல்,
இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல்,
கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை,
மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி,
இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே!
ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும்
அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.


Description: (A Song About Paandiyan Ilavandhigaippalli Thunjchiya Nanmaaran)

Lord Siva has a sapphire like throat. He made the big , high Meru mountain as a bow and Vaasuhi snake as a chord.
He destroyed the three forts with a single arrow.
He has worn the crescent moon on his hair.
On his beautiful face, there is an eye on the forehead.
You are like that forehead eye of Lord Siva and you are above all kings.

Oh Maaraa wearing garland and having fame ! The kingdom which has the big four army is a good kingdom.
The four armies are: 1.Fighting elephants which have much anger
2.Horses which run fast
3.Big chariots which have long flags
4.Warriors who have strong will.
The greatness of the kingdom depends upon its righteous rule.
The king should not bend the scepter to hide the crime of one who is his favorite .
He should not think to punish one without considering his good qualities as he is a stranger.
Oh king ! You shine like the red sun which gives light commonly.
You give cold light like the white moon. You give gifts like the rain.
You give those who come to you saying that they have nothing, without saying “No”.
Oh great king! You live long. In the Thiruchendur town white waves are destroying again the seashore.
Oh king! You live billions of years than the spread sand.

-Madurai Marudhan Ilanaahanaar.

புறநானூறு - 54. எளிதும் கடிதும்!

புறநானூறு - 54. எளிதும் கடிதும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.
திணை: வாகை. 
துறை : அரசவாகை. 


எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;

இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்

பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

பொருளுரை:

எம்முடைய அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அந்த ஊருக்கு உரியவர்கள் போல், 
காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் நாளவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. 

அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. 
கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு, மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். 

வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, 
அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், 
சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.


Description: (A Song About Seramaan Kuttuvan Kodhai)

The town in which our king Seramaan Kuttuvan stays and rules is an ancient town. 
It is easy for the poets only to enter into his town at any time like the people of that town and enter into his courtyard proudly. 

Kuttuvan Kodhai has the quality of giving to the beggars so that the rainy cloud will feel shame. 

If his enemies think that they can also go like the poets, they will perish like the shepherd , who has worn dirty clothes, 
garland made up of leaves and folded lips to whistle, wishes to go with his flock of sheep which have small heads, 
near the forest where the tiger lives and dies. 
-Konaattu Erichchaloor maadalan Madhurai Kumaranaar



முலம்:

Friday, March 18, 2016

புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!

புறநானூறு - 53.  செந்நாவும் சேரன் புகழும்!

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற

களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து

வாழேம் என்றலும் அரிதே; தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்

பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.

பொருளுரை:

முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், 
விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் 
போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய! உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; 

சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. 
அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். 

”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். 
உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.


Description: (A Song About Seramaan Maandharanjcheral Irumporai)

The spread white sand looks like the pearl in the matured shells . 
The shining gems are fixed in the storeys. The ladies who have worn beautiful bangles, gathered to dance kuravai dance in Vilangil town. 
The enemies tried to stop their dance. You defeated them and removed the sorrow of the dancers. 

You have the honour of having strong elephants and fast running horses. If we elaborate your fame, it will go on increasing. 
If we try to tell it briefly, it will go on growing. Poets like me cannot tell it fully ever. 

Your fame astonishes us. Though your fame is vast in this world where so many scholars have born.

We should not stay saying that we could not do. 
It will be nice, if Kapilar, who has the ability of writing many meaningful poems very quickly , is alive now. 
You feel that you are not lucky enough to have him today. 
Though Kapilar is not alive, I will sing your fame got by defeating your enemies as much I can. 

-Porundhil Ilangkeeranaar