Sunday, February 14, 2016

புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!

புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!

பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை. 
துறை:அரசவாகை. 

புலவரை யிறந்த புகழ்சா றோன்றல் 
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி 
வான்றோய் வன்ன புரிசை விசும்பின் 
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் 
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை 

அருங்குறும் புடுத்த கானப் பேரெயில் 
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய 
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென 
வேங்கை மார்ப னிரங்க வைகலும் 
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் 

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே 
இகழுந ரிசையொடு மாயப் 
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. 

பொருளுரை: 

உன்னைப் புகழ்ந்து பாடும் புலவோரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ! 

நில எல்லையைக் கடந்த பாதலத்தே உள்ள ஆழ்ந்த அகழியினையும், 
உயரத்தால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும், மதிலில் வானத்தில் மீனைப் பூத்தாற் போன்ற வடிவுடைய
 அம்பெய்தற்குரிய துளைகளை உடைய ஏவல் அறையினையும், 
வெயில் கதிர்கள் நுழையாத அடர்த்தியான மரங்கள் நிறைந்த காவற் காட்டினையும் உடையவனே! 

நெருங்கி கைப்பற்ற முடியாத சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண், 
வலிமையான கையை உடைய கொல்லனால் செந்தீயினில் சுடப்பட்ட இரும்பினில் ஊற்றப்பட்டு உண்ட நீர் திரும்பப் பெறல் இயலாதது போல, 
உக்கிரப் பெருவழுதியிடமிருந்து இனி கைக்கொள்ள முடியாது எனக் கருதி வேங்கை மார்பன் வருந்த,
 நாள்தோறும் வெற்றி கொள்ளத் தழைத்த தும்பையையுடைய, புலவர் பாடப்படும் துறைகளை முடித்த, வெற்றியினை உடைய வேந்தனே! 

உன்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே மறைந்து போக வெற்றிப் புகழுடனே நீ விளங்கி உன் வேல் பொலிவதாக! 


Description: (A Song About kaanappereyil Kadandha Ukkirapperuvazhudhi)

Oh noble! You are the boundary to the fame which the poets sing. 
Kaanappereyil has a very deep ahazhi, sky scrapping walls, balconies which look like the stars in the sky, 
forests through which the rays of the sun cannot penetrate and small forts which cannot be reached. 

Today it has come to the possession of vazhudhi. Vengai Maarban feels that it cannot be regained like the water which disappears
 when it falls on the heated iron in the strong blacksmith's work place. 

You get victory after victory everyday. You are sung by many poets. Let the fame of your enemies disappear who blame you.
Let your victorious spear be shine with fame. 

-Iyoor Moolangkizhaar


முலம்:

http://thamizhanna.blogspot.in/2010/06/purananooru-16-to-25-english.html

No comments: