Friday, February 12, 2016

புறநானூறு - 18. நீரும் நிலனும்!

புறநானூறு - 18. நீரும் நிலனும்!

பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய

பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி

வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்

இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே

பொருளுரை:
ஒலிக்கின்ற கடலால் முழுதும் சுற்றிச் சூழப்பட்டு பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத்
தனது முயற்சியால் உன்னுடைய புகழை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தி ஒன்றாக
தாமே ஆட்சி செய்த வலியவர்களின் வழித்தோன்றலே!

ஒன்றைப் பத்து முறையாக அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசியாக இருத்திய பெருமையுடைய எண் அளவுக்கு உனது வாழ்நாள் பெருகட்டும்.
நீரின் மட்டத்திற்குத் தாழ்ந்த சிறிய காஞ்சியின் பூக்களைக் கவரும் இனமாகிய வாளை மீன்களும், நுண்ணிய ஆரல் மீன்களும்,
ஒளிறும் கெளிறு மீன்களும் நிறைந்த ஆழமான அகழியினையும் வானம் அஞ்சும் அளவு உயர்ந்த அழகிய அரண்களையும்,
வளமும் பொலிவும் உள்ள பழமையான ஊரினையுடைய வலிமையான வேந்தே!
உன் இறப்பிற்குப் பின் நீ போக விரும்பும் மறுமைப் பேறாகிய சொர்க்க உலகத்தை நுகரும் செல்வம் விரும்பினும்,
உலகத்தைக் காக்கும் பிற வேந்தர் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாவதை விரும்பினும்,
மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும் அத்தகைய விருப்பத்தை நிறைவேற்ற நீ செய்ய வேண்டிய தகுந்த செயல்களை இப்பொழுது கேட்பாயாக பெரியோனே!

நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும் உடம்பிற்கெல்லாம் உணவால் வளர்க்கப்பட்ட உடம்பு உணவையே பொறுத்து என்பதால்,
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர் எனப்படுகிறது.
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர் நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்
இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்.

நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலமானது இடம்
அகன்ற நிலப்பரப்பாயினும் பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால் கொல்லும் போர்த் தொழிலை உடைய செழியனே!

இதனை அலட்சியப்படுத்தாது, விரைவில் நிலம் பள்ளமாக உள்ள குழிந்த இடங்களில் நெடிய நீண்ட கரையெடுத்து, நீர்நிலை அமைத்து நீரைத் தேக்கி வேண்டுமளவு பயன்படுமாறு பெருகச் செய்.
அப்படிச் செய்தோர் தாம் செல்லும் உலகத்து அறம், பொருள், இன்பம் மூன்றினையும் இவ்வுலகத்து தம் பேரோடு தளைக்கச் செய்தோர் ஆவர்.
அந்நீரைப் பெருகச் செய்யாதோர் இவ்வுலகத்து தம் பெயரைத் தளைக்கச் செய்யாதோர் ஆவர்.
Description: (A Song About Thalaiyaalangkaanaththuch Seruvendra Paandiyan Nedunchezhiyan)
Oh successor of the kings who ruled the world which is surrounded by the roaring seas
by capturing it with their effort and who rooted their fame !
Let your life be up to the last number. Let your life time grow.

Oh king of the ancient town which has a group of vaalaifish, tinny aaral fish, big varaal fish and keliru fish
which wish to eat the kaanji flowers floating on the water, high walls which touch the sky and fertile land.

If you want to get the wealth in the heaven, to conquer all kings, to become the only king of the world and
to root your good fame, listen to the noble qualities to rule more.

The bodies of the lives cannot live without water.
Those who give food to remove the hunger are considered as those who give us lives.
Hence the food is the life to the bodies.
The water together with land produces food .
Those who help for the production of food by cultivating the land with water are eligible for the fame of giving life and body.
Though it is a vast land, it will not be of any use if it expects the rain.

So Sezhiyaa having the power of fighting ! Don't neglect the followings.
Those who store water in the valleys and create water sources alone get the heavenly pleasure and fame.
Those who cannot store water for cultivation cannot root their fame in this world. -Pulaviyanaar


No comments: