Thursday, February 4, 2016

புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!

புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!

அரிமயிர்த் திரண்முன்கை 
வாலிழை மடமங்கையர் 
வரிமணற் புனைபாவைக்குக் 
குலவுச்சினைப் பூக்கொய்து 
தண்பொருநைப் புனல்பாயும் 

விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் 
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே 
வெப்புடைய வரண்கடந்து 
துப்புறுவர் புறம்பெற்றிசினே 
புறம்பெற்ற வயவேந்தன் 

மறம்பாடிய பாடினியும்மே 
ஏருடைய விழக்கழஞ்சிற் 
சீருடைய விழைபெற்றிசினே 
இழைபெற்ற பாடினிக்குக் 
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 

எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை 
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. 


பொருளுரை: 

மென்மையான முடிகளையுடைய திரட்சியான முன் கைகளில் தூய ஆபரணங்களை அணிந்த விளையாடும் பருவத்து இளமகளிர் (மங்கை - 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்) வண்டலில் இழைத்த சிறுமணலில் செய்த பாவைக்கு வளைந்த மரக்கிளைகளிலிருந்து கோட்டுப் பூக்களைப் பறித்து பொருநை ஆற்றின் குளிர்ந்த நீரில் பாய்ந்து விளையாடும் வானளாவிய புகழினையும், வெற்றியினையும் உடைய கருவூரில் பாடல் பெறுவதற்குத் தகுதியான வெற்றியையுடைய அரசனே! 

பகைவரின் கடும் பாதுகாப்புடைய காவற் கோட்டையை அழித்து, வலிமையோடு எதிர்த்த பகைவரை வென்று, அவரிடமிருந்து திறையை கொடையாகப் பெற்றவனே! 

திறையை கொடையாகப் பெற்ற வலிமையான அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த கழஞ்சுகளை உருக்கி செய்யப்பட்ட அருமையான பொன்னரிமாலை, முத்துமாலை போன்ற அணிகலன்களைப் பெற்றாள்! 

அணிகலன்களைப் பெற்ற பாடினியின் குரலுக்கு இணக்கமாகவும், சிறப்பாகவும் கைகளால் தாளமிட்டு இனிமையாகப் பாடவும் செய்த பாணனும் பிரகாசமான உலை நெருப்பிலிட்டு உருவாக்கப்பட்ட வெள்ளி நாரினால் தொடுத்த பொற்றாமரைப் பூக்களைப் பெற்றான். யான் அது பெற்றிலேன்! என்று அரண்மனை வாயிலில் நின்று தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு வாயிற்காவலனிடம் சொல்வது போல இப்பாடல் அமைந்திருக்கிறது. 


Description: (A Song About Paalai Paadiya Perungkadungo)

The young ladies who have soft haired fore hands and shining ornaments play with the toys in the sand houses. 
They decorate those toys with fglower which are on the branches of the trees. They swim and bathe in the cold Porunai river.

 The King has fame which reaches the sky. He is very strong. He goes to the enemies' countries on battle. His fame is sung by many. 

He has captured many forts of the enemies. He makes the strong enemies retrace. When the lady singer sings about his braveness which made the enemies retrace, she gets beautiful ornaments which are made up of several kazhanju gold. 

The male singer who has the ability to sing with the female singer gets garland made up of golden lotuses tied with silver thread. 
-Peymahal Ilaveyini


முலம்:
http://eluthu.com/kavithai/122949.html

http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html

No comments: