Monday, February 29, 2016

புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!


இப்பாட்டில் ஆலத்தூர் கிழார், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டு இருந்தபோது, அடைபட்டிருந்த கருவூர் மன்னன்,
சோழனுடைய வீரர் தன் நகர்ப்புரத்துக் காட்டிலுள்ள காவல் மரங்களை வெட்டுவதால் உண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்பது கண்டு,

புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!

பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி. 
துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது. 


அடுநை யாயினும் விடுநை யாயினும் 
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் 
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் 
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் 
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் 

கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் 
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து 
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் 
கடிமரந் தடியு மோசை தன்னூர் 
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப 

ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின் 
சிலைத்தார் முரசங் கறங்க 
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. 


பொருளுரை:
சோழனை நோக்கி, “வேந்தே! அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த செறிந்த பரல்கள் உடைய சிலம்பையும், 
சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர் பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து,
பகைவர்களால் காணப்படும் அண்மையில், 
திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடும் குளிர்ச்சியான ஆன் பொருந்தம் என்ற அமராவதி ஆற்றின் வெண்ணிறமான மணலைச் சிதற விளையாடுகிறார்கள். 

வலிய கைகளையுடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்த அழகிய வெட்டு வாயினை உடைய நீண்ட கைப்பிடியுடைய கோடாலிகள் வெட்டுவதால் 
நின்ற நிலை குலைந்து பூமணம் கமழும் மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகி விழ, 
காடு முழுவதும் காவல் மரங்களை வெட்டும் சப்தம் தனது ஊரின் நீண்ட கோட்டைச் சுவரின் உள்ளே தனது காவலையுடைய அரண்மனையில் ஒலிக்கிறது. 

அதைக் கேட்டும் மானமின்றி அங்கே அரண்மனை யில் மகிழ்வாக இருந்த வேந்தனுடன் இவ்விடத் 
தில் வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, 
அவனுடன் போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல் ஆகும். 

ஆதலால், உன் பகைவனாகிய சேரனை, கருவூர் மன்னனைக் கொல்வதானாலும், 
கொல்லாமல் விடுவதானாலும் அவற்றால் உனக்கு வரும் பெருமையை நான் சொல்லத் தேவையில்லை, 
நீயே ஆராய்ந்து அறிந்து கொள். எனவே அப்போரைச் செய்யாது நிறுத்தி விடு" 
என்று ஆலத்தூர்கிழார் கிள்ளிவளவனிடம் கூறிப் போரை விலக்குகிறார். 

Description: (A Song About Sozhan Killivalavan)
The ladies who worn silambu and beautiful bangles sit and play kazhangu with pieces of gold on the sand heaped near the Porunai river. 

The tall trees with full of flowers fall down making the white sand scatter as they are cut by sharp axes made by the blacksmith who has strong hands. 

Though the sound of the falling trees is heard by the king, who is behind the tall walls of the fort, he does not do anything. 

He has not the will power to oppose the enemies. 
It is shameful to think fighting with such a coward wearing victorious garlands and sounding brave murasu. 

I don't know whether you will kill that cowardice king or you will let him alive. 
Select which ever is suitable for your greatness. I have nothing to say to you. 
-Aalaththoorkkizhaar

முலம்:



Sunday, February 28, 2016

புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!

இப்பாடலில், இப்பாடல் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்கு குடிகள் செலுத்த வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் செலுத்தப்படாமல் அரசர்க்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி விட்டுத்தரல் வேண்டுமெனக் கேட்க குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை அடைந்தார்.

புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!

பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: செவியறிவுறூஉ
சிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.


நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!


அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்


நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு

உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய

குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை

ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.

பொருளுரை:
இப்பாடல் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், 
விளைநிலங்கட்கு குடிகள் செலுத்த வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் செலுத்தப்படாமல் அரசர்க்குக் கடனாய் விட, 
அதனைத் தள்ளி விட்டுத்தரல் வேண்டுமெனக் கேட்க குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை அடைந்தார். 

அவனிடம், " ‘நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தனே! நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக 
காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு 
உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது 
உன்னுடைய அரசுதான் பெருமானே! 

விளங்குகின்ற சுடர்க் கதிர்களையுடைய கதிரவன் நான்கு திக்கிலும் தோன்றினாலும் 
ஒளிபொருந்திய கதிர்களையுடைய விண்மீன்கள் தென்திசைக்குச் சென்றாலும் அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல கால்வாய்களாகப் 
பிரிந்து நீர்வளம் சிறக்கிறது. அதனால் இது மூன்று இலைகளாகப் பிரிந்த வேலினை ஒப்ப காட்சி அளிக்கிறது. 

அசைந்த கணுக்களையுடைய கரும்பின் வெண்மை யான பூக்கள் அசைந்தாடும் நாடென்று சொல்லப் படுவது உனது நாடே ஆகும். 
அத்தகைய நாட்டை உடைய செல்வமும் பெருமையும் உடைய வேந்தே! உன்னிடம் சில செய்திகள் சொல்வேன்; 
என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக! 

அறக்கடவுளே நேரில் அரசர் உருவெடுத்து ஆட்சி செய்வதைப்போல், வளையாத கோல் போன்ற செங்கோலால் 
ஆராய்ந்து ஆட்சி செலுத்தும் உன் ஆட்சியில் உன்னிடம் நீதி கேட்கும் பொழுது மிகவும் எளியவர்கள் இங்கு, 
மழைத்துளியை விரும்பி வேண்டிய பொழுது பெருமழை பெய்யப் பெற்றது போல வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். 

ஞாயிற்றைத் தன்மேற் சுமந்து பக்கம் திரண்ட மேகம் மேலேயுள்ள ஆகாயத்தின் நடுவில் நின்று அங்கே அதன் வெயிலை மறைப்பதுபோல் 
கண்ணொளியுடன் மாறுபட விளங்குகின்ற உனது வானை முட்டிய வெண்கொற்றக் குடை வெயிலை மறைத்தற்கு கொண்டதோ என்றால் அதுவல்ல! 
வருத்தமுற்ற குடிமக்களை நிழல் கொடுத்து காப்பதற்காகவே உள்ளது கூரிய வேலினையுடைய வளவ! 

உள்ளே வயிரமில்லாத இளைய பனந் துண்டங்கள் வேறு வேறாகக் கிடப்பது போல யானைகளின் திரட்சியான கூட்டம் பொருதும் 
இடமகன்ற போர்க் களத்தில் வருகின்ற பகைவர் படையை எதிர் நின்று போரிட்டு பகைவர் தோல்வியுற்று புறமுதுகிடு 
வதைக் கண்டு ஆரவாரித்து உனது போர் செய்யும் படை தரும் வெற்றியும் உழவர்களின் கலப்பை ஊன்றி நிலத்தில் 
உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். 

மழை பெய்யும் காலத்தில் பெய்யத் தவறினாலும், விளைச்சல் குறைந்தாலும் இயல்பான காரணங் களல்லாமல் செயற்கையாக
மக்களது உழைப்பை யும் மீறி ஏற்பட்டாலும் அரசரையே பழித்துரைக்கும் இந்த இடமகன்ற பரந்த உலகம். 

அதனை நன்றாக அறிந்தாயென்றால் நீயும் புறம் சொல்வோரது உறுதியில்லாத சொற்களை மனதில் கொள்ளாமல் 
ஏரைப் பாதுகாக்கும் உழவர்களின் குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிகளையும் பாதுகாக்க வேண்டும். 
அவ்வாறு செய்யின், உனக்கு அடங்காத பகைவர்களும் உன் பாதங்களைப் போற்றுவர்’ என்று சோழன் கிள்ளி வளவனுக்கு 
வெள்ளைக்குடி நாகனார் அறிவுறுத் துகிறார். 

Description: (A Song About Sozhan Killivalavan)

Oh king ! You are the only person who has the greatness to be called as king 
among kings who rule the fertile Thamizhnaadu which is in this earth 
which has blue seas as boundary and which is spread up to the sky 
where there is no movement of the air. 

Your country is the only fertile country which has the greatness of being fertile even 
if the sun appears on all the eight directions and hurts with its hotness. 

Though the Venus appears in the south , the cold , 
beautiful Kaaviri river runs through several canals and makes the land fertile. 
The sugarcane with white flowers look like the fence made up of vels. 

Oh king having greatness and fertility ! Listen my following words which are for your good. 
The justice given by you without any deviation from ethics is like the rain 
which showers in the expected time. 

Your white victorious umbrella, which is up to the sky where there are rainy clouds , 
is not merely an umbrella which protects the hotness of the sun. 

It is the one which removes the sorrows of your people/ it is the symbol of kindness 
and it showers mercy. Oh Killivalavaa having a sharp vel ! 

Your enemies are like the young palm tree which is cut into many pieces. 
You remember that the victory and the fame which were brought by your warriors 
defeating the enemies' elephant army is due to the food 
which was cultivated by the farmers with their plows. 

The world will scold only the king for the failure of the seasonal rain, 
the decrease of the fertility of the land and other artificial harms. 

Oh king ! If you realize this, avoid the false statements, 
save the farmer community and do good to the people, your enemies will also obey and praise you. 

-Vellaikkudi Naahanaar

Saturday, February 27, 2016

புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

 
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

பொருளுரை:

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை,
அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க, 'அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே!
பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினை யாளர்க்கும்
சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும்
குரவர் வருந்த கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும்,

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு
அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.

புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில்
தேனும் கலந்து இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு
 இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் கள்ளமில்லா உள்ளத்துடன் வேண்டிய
இன்சொற்களைப் பலவாறாகப் பேசியபடி பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றைப் பாணர்கள் உண்பார்கள்.

அவர்களுக்கு நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன்
எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி அதிகாலையிலும் மாலை வேளையிலும் உனது பெருமை
பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால் பல கதிர்களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்றமாட்டான்.

பெருமானே, நானோர் எளியவன்! இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின்
இமயமலையில் திரண்டு இனிய ஓசையுடன் கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் நீ வாழ்வாயாக!
என்று ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வாழ்த்துகின்றார்.


Description: (A Song About Sozhan Kulamuttraththuth Thunjchiya Killivalavan)

There is compensation even for those who cut the breasts of the cows,
those who do abortion to ladies who wear beautiful ornaments and those
who make their parents worry.

The ethical books say that even if the world becomes upside down,
there is no compensation for those who forget gratitude.

Oh lord of the lady who has worn beautiful ornaments !
Our group eats the rice of varahu cooked with milk and mixed with honey in the morning and evening.
We also eat the fatty, warm flesh of the rabbit.
We willingly converse with the Paanaas who have frank hearts,
in the common place where there are ilandhai trees.

Oh Killivalavaa ! You give large quantity of wealth to those Paanaas who are eating good food happily.
If I fail to greet you and praise your good feet, the sun will not appear.

I am a simple person. I will not do mistakes.
If it is true that the good deeds done by the nobles will be stable,
you long live more than the droplets shower by the rainy cloud which forms on the Himalaya.

-Aalaththoorkkizhaar


முலம்:

Friday, February 26, 2016

புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!

புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை. 
துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி. 

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் 
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள் 
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய 
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர் 
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 

முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் 
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் 
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின் 
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை 
பாடுநர் வஞ்சி பாடப் படையோர் 

தாதெரு மறுகிற் பாசறை பொலியப் 
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த 
மலரா மாலைப் பந்துகண் டன்ன 
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும் 
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை 

வல்லோன் றைஇய வரிவனப் புற்ற 
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக் 
காம விருவ ரல்லதி யாமத்துத் 
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின் 
ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி 

பொருளுரை: 

வேந்தே! காட்டில் தங்கி வாழும் சினம் மிக்க வேட்டை நாய்களை உடைய வேடன் மான் தசைகள் வைக்கப்பட்ட ஓலையால் புனைந்த பெட்டியும், 
இடைச்சியர் குடம் நிறைய கொண்டு வந்த தயிரும் ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் பெற்றுக் கொண்டு, குளத்தின் கீழுள்ள வயல்களில் விளைந்து, 
வேறிடத்தே அமைத்த களத்தில் தொகுத்து, வைக்கோலும் பதரும் களைந்த தூய்மையான நெல்லை முகந்து எடுத்துக் கொடுப்பர். 

வேடரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்ற ஊர் தென் திசையில் பொதிகைமலை உள்ள பாண்டியனது நல்ல நாட்டில் உள்ளது. 
அங்கு அமைந்த ஏழு அரண்களின் கதவுகளை அழித்துக் கைப்பற்றி பெரிய வாயை உடைய உனது புலியைப் பொறிக்கும் வலிமையை உடையவன் நீ! 

உன்னைப் பாடும் புலவர்கள் நீ பகைவருடைய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதைப் புகழ்ந்து பாட, 
உன் படைவீரர்கள் பூந்தாதுக்கள் பரவியுள்ள தெருக்களில் அமைந்த பாசறைகள் பொலிவு பெற, 
உலராத பசுமையான இலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட மலராத முல்லை அரும்பு களாற் தொடுத்த மாலையின் பூப்பந்தைப் 
காண்பது போன்ற தசைகளோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையை பாணர்களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கிறார்கள். 
அத்தகைய சிறப்புடையது உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம். 

கைவல்லுனர்களால் புனைந்து செய்தும் வரையப்படும் அழகு பொருந்திய அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை 
ஆடும் அழகை ஒப்ப அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாக இருவராக அல்லாமல் நள்ளிரவில்
தனியாக ஆண்மகன் ஒருவன் செல்வதில்லை. 

அத்தகைய குளிர்ந்த மலர்களையுடைய பூஞ்சோலையின் செல்வதற்கு இனிய செறிந்த மணலையும், 
புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் மண்டபங்கள் தோறும் செம்மறி யாடுகளை அறுத்து உண்டு, 
அல்லிப்பாவைகள் ஆடும் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். பாணர் களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கும் 
உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம் நீ எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவினும் சிறப்புடையது
 
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப 
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே

Description:( A Song About Sozhan Nalangkilli)

The hunters who live in the forest and who have hound give basket full of deer flesh. 
The shepherds give potful of curd. The farmers' houses are filled with deer flesh and curd. 
The ladies in the farmers' houses fill up the baskets of the hunters and the pots of the shepherds with white paddy which grow on the banks of the pond. 
The hunters and shepherds take them happily. 
You are strong enough to invade the fertile Paandiyaa country, destroy the seven forts and security. 
You are strong enough to engrave your big mouthed tiger symbol there. 

So poets are praising you. 
Your war camps surrounded by the bulls and are near to the common place where the shepherd ladies dance kuravai dance. 
There the rice balls with the flesh which look like the garland made up of the buds of Mullai with fresh leaves are received by the Paanaas with desire. 
The ladies and gents resemble the dancing allippavaies done by the artisan go through the beautiful parks. 
No one go there single. The dinner festivals celebrated by you in the storeys by killing sheep is very fine. 
-Kovoorkkizhaar



Thursday, February 25, 2016

புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!

புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி.
சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு. 


கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப் 
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ 
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள் 
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென 
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம் 

பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் 
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி 
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த 
பசுமட் குரூஉத்திரள் போலவவன் 
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. 

பொருளுரை: 

இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால்
 நல்ல அறிவு நுட்பமுள்ள குயக்குலத்து இளையோர் மண்பாண் டங்கள் வனைவதற்கு தேர்க்காலை 
ஒத்த சக்கரத்தில் வைத்த பச்சை மண்ணாகிய கனத்த உருண்டை போல, இந்த குளிர்ந்த மருத நிலத்தை யுடைய நாடு சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது. 


ஆதலால், நம் சுற்றத்தாரின் இல்லங்களில், உணவு சமைக்கும் பாத்திரங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 
விலையாக நீளமான கொடிகளில் பூக்காத வஞ்சியாகிய வஞ்சி நாட்டையும் தருவான் என்ற ஒன்று மட்டுமா! 

நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினைப் பூசிய வளைந்த சந்தினையுடைய (carrying angle) முன் கையினையும், மூங்கில் போன்ற தோளினையும், 
ஒளிபொருந்திய நெற்றியினையுடைய விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று 
மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்! ஆதலால், பரிசில் மக்களே! நாம் எல்லோரும் அவனைப் பாடுவோம், வாருங்கள்! 

விளக்கம்: 

பூத்தவஞ்சி வஞ்சிக்கொடிக்கும், பூவாவஞ்சி வஞ்சிநகர்க்கும் ஆதலால், பூவாவஞ்சி என்றார் ஆசிரியர் கோவூர் கிழார்.
 பூவாவஞ்சி என்பது கருவூர்க்கு வெளிப்படை. வஞ்சிநகர் வஞ்சிக்கள மென்றும், பின்பு அஞ்சைகளமென்றும் மாறிய காலத்தில் கருவூர் வஞ்சியென வழங்கலாயிற்று. 

விறலியர் பூவிலை பெறுக என்றவிடத்து, பூவிலை மடந்தையராகிய கூத்தியரின் நீக்குதற்கு, 
பூவிலை என்பதைப் பூவிற்கு விலை எனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர், 
தலையில் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக ’மாட மதுரை தருகுவன்’ என்றார். 

இவ்விரு நகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் 
சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன எனத் தெரிகிறது. 


Description: (A Song About Sozhan Nalangkilli)

Sozhan Nalangkilli is able to give Vanji where long flags are waving ,in order to fill up the food vessels of his people and keep them content. 
He is able to give Madhurai which has many storeys as a gift to the dancers who have bent bangles,
 bamboo like shoulders and beautiful foreheads who praise him. 

So oh poets !. Come . Let us praise him. Like the clay which is put by the Kuyavaa children on the wheel gets the shape of the desired vessel,
 this cold , fertile land lives according to his command. -Kovoorkkizhaar


முலம்:
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

Wednesday, February 24, 2016

புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!

புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!

பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை. 
துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால்

துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,

நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்,

காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,

வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.


பொருளுரை: 

உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்குரிய சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் 
அறத்தின் பின்னே வரும் காட்சி போல சேர பாண்டியர் ஆகிய இருவரது குடையும் பின் வர மேலான புகழுடைய உனது ஒரே வெண் கொற்றக்குடை 
நிறமும் அழகும் உடைய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்க நல்ல தணியாத புகழை விருப்புடன் நினைந்து 
வெல்லும் போரினைச் செய்யும் பாசறையில் இருப்பதல்லாது உனது நகரின் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய் நீ! 

யானைக் கொம்பிலுள்ள முனைப்பூண் மழுங்கி, 
முகம் தேய மண்டியிட்டு பகைவரின் காவலை யுடைய கோட்டை மதிற் சுவரைக் குத்தும் உனது யானைகள் 
அடங்காது இருக்கின்றன. போரென்று அறிந்து விரும்பி அணிந்த வீரக் கழலையுடைய உனது மறவர்களும் 
காட்டின் நடுவில் அமைந் திருந்த பகைவர் நாடு மிகத் தொலைவில் இருப்பதால் நாங்கள் செல்ல மாட்டோம் எனச் சொல்ல மாட்டார்கள். 

பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி அங்கேயே பகைப்புலத்தில் தங்கியும், 
கிழக்குக் கடற்கரையைப் பின்னால் விட்டு நீங்கியும், மேற்குக் கடல் பகுதியை அடைந்து அக்கடலின் வெண்ணிறத் தலை போன்ற அலைகள் உனது குதிரைகளின் குளம்புகளைத் தழுவ, 
நீ வலமாக ஒவ்வொரு நாடாக வரலாமென எண்ணி மனம் அலைபாயக் கலக்கமுற்று நெஞ்சம் நடுங்கித் துன்பம் மேலிட 
வடநாட்டிலுள்ள அரசுகள் உறக்கத்தைத் துறந்த கண்களை உடையனவாயின. 


Description: (A Song About Sozhan Nalangkilli)

Due to the excellence of ethics, money and pleasure are placed after it. 
Like that the victorious umbrellas if the Seraa and Paandiyaa are placed after the victorious umbrella of the Sozhaa which shines like the full moon. 
It spreads the fame of the Sozhaa fa r off. 

Oh Sozhaa ! You wish only victorious fame got from brave wars. 
You wish to live in war camps and do not wish anything else.

Your fighting elephants are awaiting for attacking the walls of the enemies' forts so that the edges of their tusks become blunt.
They never keep quiet. Your warriors who have won kazhals feel happy if war comes. 
They are without fear though the enemies' countries are far away among the forest.

 So your enemies are shivering without sleep, thinking that you will come to the northern side with your army after celebrating your success . 
They think that you will eave the eastern sea and reach the western sea so that the waves of the seas wet the hoofs of your horses. 
-Kovoorkkizhaar


முலம்:
http://eluthu.com/kavithai/133952.html
http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் நிறுவனம்


பள்ளி:

http://www.sfanow.in/home

கல்லூரி:

http://www.addedsport.com/

Tuesday, February 23, 2016

கைவினை பொருள்கள் வாங்கும் இணையதளம்

http://www.cbazaar.com/
http://www.craftsvilla.com/
https://www.namastecraft.com/
http://www.craftgully.com/
http://www.theethnicstory.com/
http://tnpoompuhar.org/

http://www.pachisi.co.in/  Traditional Games of India


http://paintcollar.com/
http://www.itshandmade.in/
https://www.etsy.com

புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?

புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண். 
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல். 


செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் 
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் 
வளிதிரிதரு திசையும் 
வறிது நிலைஇய காயமு மென்றிவை 
சென்றளந் தறிந்தார் போல வென்றும்  

இனைத்தென் போரு முளரே யனைத்தும் 
அறிவறி வாகாச் செறிவினை யாகிக் 
களிறுகவு ளடுத்த வெறிகற் போல 
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட 
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு 

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது 
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் 
இடைப்புலப் பெருவழிச் சொரியும் 
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. 


பொருளுரை: 

செங்கதிரவன் செல்லும் வழியும் அக்கதிரவனின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும் 
காற்று இயங்கும் திசையும் ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை 
அங்கங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர். 

அத்தகைய கற்றறிந்த அறிவுடையோர்களாலும் அறிய முடியாத அளவில் அடக்கத்தை உடையவனாக, 
யானை தன் வாயினுள் அடக்கிய எறிகல் போல மறைத்த வலிமை உடையவனா தலால் உன்னைப்பற்றி முழுவதும் விளங்கும்படி புலவர்கள் எப்படிப் பாட முடியும்? 

பாய்மரத்தையும், மேலே விரித்துக் கட்டப்பட்ட பாயையும் எடுத்துச் சுருட்டாது, மரக்கலத்தில் உள்ள அதிகப்படியான பாரத்தையும் குறைக்காமல் 
ஆற்று முகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை பரதவர்களும், மரக்கலங்களைச் செலுத்த அறியாத உப்பு விளைப்போரும், 
மரக்கலத்திலுள்ள பொருட்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களும் பொருட்களை மரக்கலத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது இடைப்பட்ட வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடக்கும் கடல் வழியாகக் கொண்டு வரப்படும் 
பல வகையான பண்டங்களை உடைய நாட்டை உடையவனே! 


Decription: (A Song About Sozhan Nalangkilli)

There are many who have scientific knowledge . 
They know the path of the sun, the movement of the sun, the earth that is surrounded by the movement of the sun, the direction through which the wind blows, 
the sky which is above without any hold. 
They know the nature of the sun,earth, wind and sky and describe about them. 
But you are with so much of knowledge and self control so that even the people with wisdom cannot know you. 

You have a hidden strength like the stone which is kept in the cheek of the elephant which is to be spitted. 

The senseless Paradhavaas let the vessels from the sea to the river without lowering the sail and unloading some goods. 

As they do so, the things brought by them are scattered throughout the way. 
You are the lord of the fertile land which has such a sea income. 
-Mudhukannan Saaththanaar


முலம்:



http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

Monday, February 22, 2016

புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!


புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. 
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. 
சிறப்பு : சிறந்த அறநெறிகள். 


அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!

பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்

இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு

உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!

இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!


பொருளுரை: 

நெருப்பால் உருக்கி தகடாகச் செய்த தாமரை மலர்களை, 
நுண்மையாகத் தட்டி கம்பியாகச் செய்த நூலில் கோர்த்து தொழில் திறமையால் பொலிவுடன் 
அமைத்த பொன்னாலான நல்ல மாலையை பரந்து விரிந்த கரிய முடியுள்ள தலையில் அழகுற அணிந்து பாணர்கள் கூட்டம் பகல் நேரங்களில் மகிழ்ச்சியுடன் உன் அரசவையில் சூழ்ந்திருக்கும். 

உன்னைச் சுற்றியுள்ள பாணர்கள் சென்ற பின்னால் உனக்கு உரிய மகளிர் தோள் உனது சந்தனம் பூசிய மார்பைத் தழுவட்டும்! 

கண்ணுக்கினிய அலங்காரத்தால் தன்னிடம் வந்தாரை நீங்காதவாறு பிணித்து இன்புறுத்தும் சிறப்புடைய அரசவை மண்டபத்தில் இனிதாக முரசு ஒலிக்க, 
தீயோர்க்குத் தண்டனை அளித்தும், தகுதியுடையோர்க்கு தகுந்த பரிசுகள் அளித்தும் நேர்மை மாறாத முறையால் சோம்பலும் கவனக் குறைவும் இல்லாது நற்செயல்கள் செய்தால் 
நன்மையும், தீச்செயல்கள் செய்தால் தீமையும் விளையும் என்பதை இல்லையென மறுப்போருடன் உடன்பட்டுச் சேராது இருப்பாயாக! 

நெல் விளையும் வயல்களில் நெற்கதிர்களை இரை தேடி மேய்ந்துண்ணும் கிளி முதலிய பறவைகளை ஓட்டுவோர் 
காய்ந்து வீழ்ந்த பனங்கருக்கு விறகு நெருப்பில் கழிக்கண் மீனைச் சுட்டு விருப்பமான கள்ளைக் குடித்ததோடு நில்லாமல் 
தென்னையின் இளநீரையும் அருந்தும் செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும் உனது படைக்கலம் பிடித்த மாந்தர். 

உன்னிடம் பகை கொண்ட மாந்தர் இரக்கத்தை எதிர்பார்த்து கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால் பந்தலாகிய சிறிய வீட்டு வாழ்க்கையினின்று நீங்கி 
உன்னிடம் வரும் அவர்களுக்கு உதவி செய்யும் நட்பான குணமுடைய உன் செயல் முறையானது. 

எனவே திருவிழாவில் கூத்தாடுபவர்கள் வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல் அவரவ்ர் பிறந்து வாழ்ந்து இறந்து போகின்ற இவ்வுலகத்தில் 
மிகுந்த மகிழ்வுடன் இருக்கட்டும் உன் உறவுச் சுற்றம். நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிக்கட்டும்! 

Description: (A Song About Sozhan Nalangkilli)

Let your court be filled with Paanaas who have worn golden garlands made up of golden lotuses on their barren black heads. 
Let your broad chest with sandal powder be embraced by your kind wives after praised by the Paanaas. 

Let the murasu be sounded in the beautiful courtyard of your palace. 
Let punishing the evil and showing mercy to the good be done by you continuously. 

You should avoid those who refuse that there is no fruit for good deeds and suffering for the bad deeds. 
Your warriors drive away the birds which come to the paddy field. 

They light fire on the palm leaves and roast the fish caught from the back waters. They eat fish and drink sour toddy. 
They nave a fertile land where there are tender coconut shedding coconut trees. 

It is your duty to rescue your warriors from living a mean life like your enemies who live in small huts. 
It is also your duty to make your warriors to give who come begging. 
This worldly life is like the dancers who assemble in the festival, dance and disperse after the festival. 
In this unstable life , let the people around you and your relatives be happy. 

Let the wealth earned by you be praised by all. 

-Mudhukannan Saaththanaar