Thursday, January 28, 2016

புறநானூறு - 5. அருளும் அருமையும்

புறநானூறு - 5. அருளும் அருமையும்!

பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி. 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;

அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.


பொருளுரை: 

எருமை போன்ற வடிவுடைய கருங்கற்பாறைகளால் சூழப்பட்டு, அவற்றிற்கு இடையிலுள்ள இடங்களில் பசுமாட்டுக் கூட்டம் போல மேய்ந்து கொண்டிருக்கும் யானைகளைக் கொண்ட வலிமையுடைய காடுகளை அரணாக உள்ள நாட்டினையுடைய அரசன் நீதானே பெருமானே! 

நீ இங்ஙனம் பகைவரால் அணுகப்படாத இயற்கையாகவே பெருஞ்செல்வத்தை யுடையவனாதலால் உனக்கு ஒரு யோசனை சொல்வேன், அதனைக் கேட்பாயாக! 

அருளையும், அன்பையும் நீக்கி பாவச்செயல்கள் செய்து நீங்காத நரகத்தை தமக்கு இடமாக்கிக் கொள்ளும் நல்லறிவில்லாத தாழ்ந்தோருடன் சேராது, நீ காத்து வரும் தேசத்தை குழந்தையை வளர்ப்பாரைப் போலக் கவனமாய்ப் பாதுகாப்பாயாக! அத்தகைய கருணை மிக்க செயல் உனக்கு பெறுதற்கரிய அருமையுடைத்தது. 

Description:

Oh King! You have a country with forest where the elephants are roaming in between black rocks like the cows grazing in between the buffaloes.

You have the fame of not conquered by the enemies. As you are incomparable, I tell you one.

You don't join with those who remove mercy and kindness and who go to hell.

You save your country as he mother saves her child. This merciful act is a great boon to the king. -Nariverooththalaiyaar

முலம்:

http://eluthu.com/kavithai/121440.html
http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html

No comments: