Monday, March 30, 2015

எப்படி, குடிமுறை அரசுப்பணி தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும்

 Graduates or those in the final year of graduation should watch out for the notification in April/May every year in Employment News, a weekly newspaper registered under the PRB Act with RNI, and published since 1975. It is published by the Publications Division of the Ministry of Information & Broadcasting (I&B).

மேலும் படிக்க:

http://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/how-to-prepare-for-the-civil-services-examination/article7045881.ece

Sunday, March 29, 2015

பிளாட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஆவணங்கள்

?ஃப்ளாட் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களை பில்டர் மற்றும் அரசு தரப்பிடமிருந்து வாங்க வேண்டும்?
மரியம் பிரிட்டோ. சென்னை,
மணி சங்கர், தலைவர்,
ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட்
ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.
‘‘பட்டா (மனைகளுக்கு) மற்றும் வில்லங்கச் சான்றிதழ் ஆகிய இரண்டை மட்டும் நீங்கள் அரசிடமிருந்து வாங்க வேண்டும். பிரிக்கப்படாத நிலங்களின் கிரயப் பத்திரம் (Undivided share of land of sale deed), கட்டுமான ஒப்பந்தம், தாய் பத்திரம், சொத்தின் லீகல் ஒப்பீனியன் சான்றிதழ், மொத்த அபார்ட்மென்ட் அல்லது அனுமதி பெற்ற வீட்டின் மொத்த வரைபடம், திட்ட அனுமதி மற்றும் வரைபட அனுமதி, சென்னையில் என்றால் சிஎம்டிஏ, மற்ற மாவட்டங்கள் என்றால் டிடிசிபி போன்ற அமைப்புகளிடம் கட்டடம் கட்டி முடித்தபின் நிறைவுச் சான்றிதழ், மின்சார அட்டை, மின்சார மீட்டருக்கு மின்சார வாரியத்தில் டெபாசிட் செய்த ரசீது, கழிவுநீர் போக்குவரத்துத் திட்டம், அபார்ட்மென்டுகளில் லிஃப்ட்களைப் பயன்படுத்த தமிழக அரசிடமிருந்து பெற்ற சான்றிதழ், பார்க்கிங் பகுதியை உறுதிபடுத்திக் கொள்ள பார்க்கிங் பகுதியின் வரைபடம் (தெளிவாக எல்லைகள் குறிபிடப்பட்டதாக, யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்கப்பட்ட வரைபடம் இருப்பது அவசியம்), தண்ணீர் சுத்திகரிப்பான், லிஃப்ட் ஆகியவைகளின் வாரன்டி கார்டு, தரைத் தளம் மற்றும் மூன்று தளங்கள் (G+3) கட்டப்பட்டிருந்தால் அதற்குப் பட்டயப் பொறியாளரிடம் பெற்ற சான்றிதழ், பூகம்ப அடித்தள விவரங்கள் அடங்கிய டாக்குமென்ட்டுகள், தண்ணீர்த் தொட்டி மற்றும் சம்ப் ஒருங்கிணைந்துள்ளதா அல்லது பிளாக்குக்கு பிளாக் என்று தனியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக பிளம்பிங் திட்ட நகல் ஆகியவற்றைப் பில்டரிடமிருந்து பெற வேண்டும். அபார்ட்மென்டில் செக்யூரிட்டி சர்வீசஸ் இருந்தால் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரிகள், பில்டர் கட்டுமானப் பணிக்கு வாங்கிய வங்கிக் கடனை அடைத்துவிட்டதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்களை பில்டரிடமிருந்து வாங்க வேண்டும்.”

முலம்: விகடன்

Thursday, March 12, 2015

ஆயில் புல்லிங்


ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், பல் துலக்கியதும், சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே, ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை, தொடர்ந்து கொப்பளிக்கவும். நீரினால் வாயையும், பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24207&ncat=11

Tuesday, March 10, 2015

பிளாஸ்டிகின் குறியீடுகள்


பிளாஸ்டிக் ரகசியம்
ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளிலும் உள்ள குறியீடுகள் அதன் பிளாஸ்டிக் தன்மையை விளக்குகிறது.
1 Polyethylene terephtalate  (PETE or PET) -  தண்ணீர், சோடா, குளிர்பானங்கள் வரும் பாட்டில்கள்.
2 High density polyethylene (HDPE) - பால் கேன், டிடர்ஜன்ட், பழச்சாறு பாட்டில்கள்.
3 Polyvinyl chloride (PVC) உணவை மூட உதவுபவை, சமையல் எண்ணெய் பாக்கெட் மற்றும் பாட்டில்கள். 
4 Low density polyethylene (LDPE) - மளிகைப் பொருட்கள், அழுத்திப் பிழியக்கூடிய பாட்டில், உணவை மூடும் கவர், பிரெட் கவர்
5 Polypropylene - தயிர் கப், யோகர்ட் கப், தண்ணீர் பாட்டில் (cloudy design), மருந்து, கெட்ச் அப், சிரப் பாட்டில்கள், ஸ்ட்ரா.
6 Polystyrene/Styrofoam - மருந்து பாட்டில்கள், மின்விளக்கு ஸ்விட்ச்
7 எண் 1 முதல் 6 வரை அனைத்து பிளாஸ்டிக்குகளும் பயன்படுத்தி இருப்பார்கள்.  சிடி, கணினி பகுதிகள், பேபி பாட்டில் போன்றவை இந்த பிளாஸ்டிக்கால் தயாராகின்றன. இதில் உணவுப் பொருட்களையும் சேமித்துவைக்கக் கூடாது.
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  2, 4, 5
   குறைந்த மோசமான பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது - 1
   மிகவும் மோசமான பிளாஸ்டிக் எண்கள் -  3, 6, 7

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=101262

Monday, March 9, 2015

மருத்துவப் பரிசோதனைகளின் போது, வெளிவரும் கதிரியக்கத்தின் அளவு

மருத்துவப் பரிசோதனைகளின் போது, வெளிவரும் கதிரியக்கத்தின் அளவு
நெஞ்சுப் பகுதி எக்ஸ் ரே - 0.1 mSv
நெஞ்சுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 7 mSv
வயிற்றுப் பகுதி சி.டி. ஸ்கேன் - 10 mSv
தலை சி.டி. ஸ்கேன் - 2 mSv
மூளை சி.டி. ஸ்கேன் - 2 mSv
இதயத்துக்கான சி.டி. ஸ்கேன் (கொரனரி ஆஞ்சியோகிராம்) - 12 mSv
(இது பெரியவர்களுக்கான அளவு. குழந்தைகளுக்கு இதில் ஐந்தில் ஒரு பங்கு அளவுதான் பயன்படுத்துவார்கள்).
மேமோகிராம் - 0.4 mSv
டெக்ஸா ஸ்கேன் - 0.001 mSv 
அல்ட்ரா சவுண்டு ஸ்கேனிங்னில் கதிரியக்கம் இல்லை. இது மிகப் பாதுகாப்பானது. எம்.ஆர்.ஐ (Magnetic Resonance Imaging) ஸ்கேனிங்கிலும் கதிரியக்கம் இல்லை. இது காந்த அலைகளைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனை.
ஓர் ஆண்டுக்கு 50mSv வரை கதிரியக்கத்தை அனுமதிக்கலாம் என்றாலும்கூட, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன், மேமோகிராம் போன்றவற்றைச் செய்துகொள்ளவே கூடாது.

Thursday, March 5, 2015

சூரிய சக்தியால் இயங்கும் தண்ணிர் சுத்திகரிப்பு சாதனம்

http://swajal.in/

http://yourstory.com/2014/12/swajal/

உதவித் தொகை : முதுகலை பட்டம் (வெளிநாடு)




நாடு
பருவமுறை
விண்ணப்ப தேதி
படிப்புப் பிரிவு

லண்டன்
September 2015
30 April 2015
கல்லூரியிலுள்ள முதுகலைப் பட்டங்கள்
லண்டன்
September 2015
23 February 2015.
சட்டம் / பொருளாதாரம்
http://scholarship-positions.com/goldman-sachs-gives-riley-mba-scholarship-asian-students-uk-2015/2015/03/12/லண்டன்September 2015  9 April 2015 முதுநிலை வணிக நிர்வாகம்
https://www.britishcouncil.in/study-uk/scholarships/charles-wallace-trust/long-term

லண்டன்February 201730 November 2016கலை, வரலாறு, 
தொல்பொருள் ஆராய்ச்சி
http://www.chevening.org/india

லண்டன்20178 November 2016.








a) http://admissions.ntu.edu.sg/graduate/scholarships/Pages/NTUMBAScholarship.aspx

b) http://scholarship-positions.com/erasmus-mundus-masters-scholarship-it4bi-eu-non-eu-students-20152017/2014/09/27/

c) http://scholarship-positions.com/principals-indian-masters-scholarships-uk-2015-2016/2014/11/15/

Wednesday, March 4, 2015

ஏன்-எதற்கு-எப்படி ? (6)


கடற்கலை மற்றும் கப்பல் கட்டும் பொறியியல் பற்றிய செய்திகள்



Naval Architecture and Shipbuilding or Ship Technology deals with the study of the design, construction, maintenance, and repair of marine vehicles such as ships and submarines. Those who desire to become a naval architect or a ship technologist can opt for B.Tech./BE courses in Naval Architecture & Shipbuilding or Naval Architecture and Ocean Engineering.

Study facilities
In Kerala, the Cochin University of Science and Technology (Cusat) offers a four-year regular B.Tech. course in Naval Architecture and Shipbuilding. Admission is through the Cusat Common Admission Test and interview. Those who have passed Plus Two or equivalent examinations with at least 60 per cent marks in aggregate for Physics, Chemistry and Mathematics and 50 per cent for Mathematics are eligible for admission. There are 24 seats. (www.cusat.ac.in)

The Sree Narayana Gurukulam College of Engineering, Kolencherry, (private self-financing), offers B.Tech. Naval Architecture and Shipbuilding. There are 60 seats. Admission to 50 per cent merit seats is through Kerala Engineering Entrance Examination.
Indian Maritime University (IMU) under the Union government, Chennai, offers a B.Tech. course in Naval Architecture and Ocean Engineering at the National Ship Design and Research Centre (university campus) in Visakhapatnam. There are 40 seats.
(www.imu.edu.in)

The Indian Institutes of Technology in Madras and Kharagpur offer B.Tech./dual-degree M.Tech. courses in Naval Architecture and Ocean Engineering. Visit www.iitm.ac.in or www.iitkgp.ernet.in.
Other institutes
In the private sector, the Academy of Maritime Education and Training (AMET University), Chennai, offers BE courses in Naval Architecture and Offshore Engineering; and Shipbuilding, Repair and Conversion Technology. (www.ametuniv.ac.in)
The International Maritime Academy, Chennai, offers B.Tech. in Naval Architecture and Shipbuilding.
(The list is only indicative)
Lateral entry
Those who have completed first-year BE/B.Tech. or the three-year diploma course in Mechanical/Electrical/Electronics/Automobile/Instrumentation and so on can directly join the second year of B.Tech. Naval Architecture & Shipbuilding course.
Navy’s course
The Indian Navy offers a B.Tech. cadet entry scheme for young men who have passed Plus Two with Physics, Chemistry and Mathematics.
Visit www.nausena-bharati.nic.in.
A list of Directorate General of Shipping-approved institutions that offer marine-related courses can be had from www.dgshipping.gov.in.
Naval dockyards, merchant navy, shipping companies, Coast Guard, shipyards, and naval & oceanography centres offer job opportunities to naval architects and ship technologists.

மூல ஆதார ஏடு:


Tuesday, March 3, 2015

சர்க்கரை நோய் ஏன் ? எதற்கு ? எப்படி?


சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப் 2  என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தவிர, ப்ரீ டயாபடீஸ், கர்ப்பகால சர்க்கரை நோய் போன்ற  வகைகளும் உண்டு.
டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் முற்றிலுமாக சுரப்பது இல்லை. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியது. இவர்கள் ஆயுள் முழுக்க இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைப் 2 சர்க்கரை நோய் என்பது மரபியல் மற்றும்  வாழ்க்கைமுறை மாறுபாட்டால் ஏற்படக்கூடியது. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும். ஆனால் அதன் அளவு போதுமானதாக இருக்காது. சிலருக்கு இன்சுலின் தரம் போதுமானதாக இருக்காது. இதை இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' என்போம்.


http://www.vikatan.com/article.php?module=magazine&aid=100128

தடுக்கும் வழிகள்:

சர்க்கரையின் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளோர் (Impaired glucose tolerance stage), வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோயைத் தாமதப்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 


இயற்கை விவசாய வழி பொருள்கள்

இளநீர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள எரசனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சுப்பிரமணியம்-வஞ்சிக்கொடி தம்பதி   http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103938

தேங்காய்http://www.thehindu.com/news/national/tamil-nadu/from-silicon-valley-to-soil/article7745789.ece

காட்டுயானம், கருத்தகார், பூங்கார், சேலம் சன்னா : 
http://www.vikatan.com/pasumaivikatan/2016-jul-25/yield/120979-traditional-breeds-will-give-193-lakh-profit.art

வெண்டை: திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேஷ். 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/yield/123662-ladysfinger-will-give-70000-profit-in-140-days.art

பாரம்பர்ய நெல் :
இவர்களை நாம் அழைத்துச் சென்றது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகே கெங்காபுரம் கிராமத்தில் சிறப்பாக பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து வரும் ‘இயற்கை விவசாயி’ மணியின் பண்ணைக்கு. 
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=123749&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். இவர், கிச்சிலிச் சம்பா ரக 

http://www.vikatan.com/pasumaivikatan/2016-dec-25/yield/126506-kichili-samba-rice-gives-better-profit.art


தென்னை:

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மலையாண்டிபட்டணம் அருகில் உள்ள நரிக்கல்பதி என்கிற இடத்தில் உள்ளது, மது.ராமகிருஷ்ணனின் இயற்கை எழில் கொஞ்சும் ‘சந்தோஷ் பண்ணை’.

தேங்காய் எண்ணைய்:

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள்
http://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/yield/126982-100-coconut-trees-give-profit-rupees-lakhs.art

நோனி:

கோவைக்கு அருகிலுள்ள, சூலூர்ப் பகுதியில் வேலுச்சாமி என்பவரும், இயற்கை முறையில் நோனி சாகுபடி செய்துள்ளார். 
http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-10/column/123675-question-and-answer.art

முருங்கை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது இவரது 22 ஏக்கர் பண்ணை. இவர் ஒரு முருங்கை விவசாயி மட்டுமல்ல

http://www.vikatan.com/pasumaivikatan/2016-oct-25/yield/124229-panjakavya-helps-to-become-millionaire.art

தென்னங்கன்று:

கோவை கல்வீரம்பாளையம் வேடப்பட்டி சாலை வழியே செல்லுபவர்கள் வெறும் தென்னை நாற்றுகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் கடைவிரித்திருக்கும் நர்சரியைத் தவிர்க்காமல் செல்ல முடியாது. 

http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/article9230606.ece

தமிழ்நாட்டில் பரவலாக மானாவாரி சாகுபடியில் கம்பு அதிகளவு பயிரிடப்படுகிறது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது
மானாவாரி சாகுபடிக்கு ஜூன்-ஜூலை மாதங்கள் ஏற்ற பட்டம். இப்பட்டத்தில் விதைக்கும்போது, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அறுவடையாகும். 


http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-25/yield/125439-rye-yield.art

தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா:
,தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன்

http://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/yield/126958-rs65000-rupees-profit-per-acres-seeraga-samba.art




Monday, March 2, 2015

உடலைத் திடமாக வைக்கும் பாரம்பர்ய நடனங்கள்


நம் பாரம்பர்ய நடனங்கள்  அறிவியல் பூர்வமான நன்மைகளைக்கொண்டவை. கும்மி, கோலாட்டம் போன்றவை நம் உடலை இலகுவாகவும், திடமாகவும் இருக்கச்செய்பவை.

அதனால்தான் சேற்றில் இறங்கி நாற்று நடுவது, களை எடுப்பதென எல்லா வேலைகளையும் நம் பெண்களால் இயல்பாகச் செய்ய முடிந்தது. சில மாதங்களே விளை நிலங்களில் வேலை இருக்கும். மற்ற நாட்களில் உடலை இலகுவாவும் திடமாவும் வைத்துக்கொள்ள அவர்களுக்கு ஒரு கலைவடிவம் தேவைப்பட்டது. அதுதான், கோலாட்டமும் கும்மியாட்டமும். உட்கார்ந்து ஆடுவது, சாய்ந்து ஆடுவதென இந்த ஆட்டம் விவசாய வேலை செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

http://www.mayuri.co.nr/

மூல ஆதார ஏடு:
http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103682

Sunday, March 1, 2015

நச்சுக்களை நீக்கும் வழிகள்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுதல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டு அழுக்கை அகற்றுதல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களில் அஞ்சனமிடுதல் செய்ய வேண்டும் என்கிறது, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம். இப்படி செய்யும்போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

காலை 6-7 மணி அளவில் எலுமிச்சை டீ யுடன், இந்து உப்பு, மிளகு சேர்த்து மிடறு மிடறாக (Sip by sip) 15 நிமிடங்கள் வரை குடிக்க வேண்டும். காலை உணவாக, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். மதியத்தில், கஞ்சி, காய்கறி உப்புமா போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம். இரவில் பழங்களை (2 வாழை)சாப்பிடலாம். மறுநாள் காலை 7 மணி அளவில் நெல்லிச் சாற்றைக் குடித்து, விரதத்தை முடிக்கலாம்.


http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103710

சமையல் குறிப்புகள்

குதிரைவாலி பொங்கல்
தேவையானவை: குதிரைவாலி அரிசி - அரை கப், பாசிப் பருப்பு - கால் கப், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காயம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, குதிரைவாலி அரிசி இரண்டையும் கழுவி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேகவைக்கவும். பிறகு, கடாயில் எண்ணெய், நெய்யைக் காயவிட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து (அடுப்பை `சிம்'மில்வைத்துத் தாளிக்கவும்) அரிசி, பருப்பில் கொட்டி, உப்பு போட்டுக் கிளறிவிட்டு, குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்தபிறகு, `சிம்'மில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்கவேண்டும்.

வரகு அரிசி தயிர்சாதம்
தேவையானவை: வரகு அரிசி  ஒரு கப், கொழுப்பு நீக்கிய பால் (ஸ்கிம்டு மில்க்)  ஒரு கப், தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது)  ஒரு கப், மாங்காய் இஞ்சி  விரல் நீளத் துண்டு, பச்சை மிளகாய்  2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  சிறிதளவு, உப்பு  ருசிகேற்ப. தாளிக்க: எண்ணெய், கடுகு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: வரகு அரிசியை இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி அதில் ஊற்றி, ஆறவிடவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, அதையும் கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டுக் கிளறி, வரகு அரிசி சாதத்தில் கொட்டிக் கிளறவும். நன்கு ஆறிய பிறகு, தயிர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு: புளித்த தயிர் என்றால், தயிர் சாதத்தைத் தயாரித்த உடனேயே சாப்பிடலாம். புளிக்காத தயிர் எனில், சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.
கொள்ளு அடை
தேவையானவை: முளைக்கவைத்த கொள்ளு  அரை கப், குதிரைவாலி அரிசி (அல்லது) தினை, மைசூர் பருப்பு, கடலைப் பருப்பு, முழு உளுந்து  தலா கால் கப், வரமிளகாய்  3 அல்லது 4, இஞ்சித் துருவல்  அரை டீஸ்பூன், கறுப்பு எள்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி  சிறிதளவு, உப்பு  சுவைக்கேற்ப, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுவைத் தனியாகவும், குதிரைவாலி அரிசி, மைசூர் பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனியாகவும் தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளை லேசாக வறுத்தெடுக்கவும். உப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் இரண்டு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அத்துடன் முதலில் கொள்ளு சேர்த்து இரண்டு சுற்றுக்கள் அரைத்து, பிறகு மீதி உள்ள ஊறவைத்த பருப்பு வகைகளைச் சேர்த்து, இஞ்சி, எள் சேர்த்து கரகரவென அரைத்தெடுக்கவும். அடை மாவில் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து, தவாவில் லேசாக எண்ணெய் தடவி, வார்த்தெடுக்கவும். மூடி போட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.
குறிப்பு: கொள்ளு, புரதம் மற்றும் ஆக்ஸிகரணிகளைக் கொண்டுள்ளது. மேலும் மெதுவான ஜீரணத்தால், அதிக சர்க்கரையின் அளவை (Post prandial Hyperglycemia) அளவைக் குறைத்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. குதிரைவாலியும் புரதம் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். பருப்பு வகைகளில் அதிகப் புரதம் உள்ளது.
தினை அரிசி துவையல்

தேவையானவை: தினை அரிசி - கால் கப், உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய்  அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெறும் வாணலியில், தினை அரிசியை பொரியும் வரை வறுக்கவும். அதே வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சிவக்க வறுக்கவும். பிறகு பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவிடவும். வறுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து புளி, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நைஸாகவும் இல்லாமல், கொரகொரப்பாகவும் இல்லாமல் அரைக்கவும். மிக்ஸி ஜாரை கழுவி, அந்த தண்ணீரையும் அரைத்த கலவையில் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து பொரிய விட்டு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத்தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து வதக்கவும். கரைத்த கலவையை தாளித்தவற்றில் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கவும். சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்ற சைட் டிஷ் இது.


நினைவுத்திறனுக்கு வல்லாரை சூப்

தேவையானவை: வெங்காயம் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், பூண்டுப்பல் – 10, பச்சைமிளகாய் -2, தக்காளி – 3, வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி - சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.

பலன்கள்: நினைவாற்றல் அதிகரிக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதயத்துக்கு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சோர்வை நீக்கும். பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.