Saturday, December 27, 2014

ஏழு சிரஞ்சீவிகள்

உலகில் ஏழுபேர் சிரஞ்சீவிகளாய்(என்றும் நிலைத்திருப்பவர்களாய்) இருக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்களில், விபீஷ்ணன், தன் அண்ணன் என்றும் பாராமல் ராவணனுக்கு நியாயத்தை உணர்த்தியதற்காகவும்; மகாபலி, தன்னையே தானமாக இறைவனிடம் ஒப்படைத்ததற்காகவும்; மார்க்கண்டேயர், இறைவன் மீது கொண்ட பக்தியின் காரணமாக, எமனையே வென்றதாலும்; வியாசர், மகாபாரதம் எனும் அழியா காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்களைப் போக்கி அருள் செய்ததாலும்; பரசுராமர், கொண்ட கடமையில் இருந்து விலகாமல், தந்தை சொல் கேட்டதாலும்; துரோணரின் மகன் அஸ்வத்தாமன், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் விசுவாசத்தைக் காட்டியதாலும், சிரஞ்சீவி எனும் நிலையை அடைந்தனர்.
இந்த வரிசையில் முதலாவதாக இடம் பெறுபவர் அனுமன். இவர், தன்னலம் பாராமல், பிறருக்காக சேவை செய்ததால், சிரஞ்சீவியாய் போற்றப்படுகிறார். பெரியாழ்வார் பெருமாளை வாழ்த்தியது போல், தன்னலமற்ற அந்த ராம தொண்டனுக்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வோம். 

Friday, December 26, 2014

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை வழிகள்



நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.


தேத்தான் கொட்டை:
முருங்கை விதை:
துளசி:

செப்புப் பாத்திரம்: உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு 

வெட்டிவேர் மற்றும் நன்னாரி: நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=36306

தேற்றான் கொட்டை அடிப்படையில் மருத்துவத் தன்மை கொண்டது. இதன் மூலம் சித்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தேற்றான் கொட்டை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில் தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். பாத்திரத்தின் அடிப்பகுதியில் அசுத்தம் தங்கி இருக்கும். மேல்பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி, குடிக்கலாம். குடிநீர்க் கிணறு உள்ளவர்கள் ஒரு கிலோ தேற்றான் கொட்டையை, கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். அந்தக் கிணற்று நீர், தெளிந்த ஊற்று நீர் போல இருக்கும். யுரேனியத்தின் கழிவுகளைச் சமன் செய்யும் தன்மை தேற்றான் கொட்டைக்கு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்

http://www.vikatan.com/pasumaivikatan/2016-nov-10/column/124796-question-and-answers.art

குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
http://www.vikatan.com/news/health/76111-drinking-water-so-the-positive-role-of-copper-soaked.art?artfrm=read_please

சென்னையில் உள்ள ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் ‘பம்மல்’ இந்திரகுமார், பதில் சொல்கிறார். 

‘‘கலங்கிய, மாசுப்பட்ட தண்ணீரைச் சுத்திகரிக்க, நம் முன்னோர்கள் தேற்றான் கொட்டையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதைப் பேச்சுவாக்கில் ‘தேத்தான் கொட்டை’ என்றும் சொல்வார்கள். தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. இந்த மரத்துக்கும் நம் முன்னோர்கள் தெய்வீக முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். தேற்றான் கொட்டை மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம், சில்லம், கதலிகம் போன்ற பெயர்களோடு பிங்கலம் என்றும் தொல்காப்பியத்தில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 


தேற்றான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் பரவலாகக் கிடைக்கின்றன. ஒரு தேற்றான் கொட்டையின் கால் பகுதி அளவுக்கு, கல்லில், தேய்த்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த நீரைப்பார்த்தால் தெளிவாக இருக்கும். அடிப்பகுதியில் நீரில் இருந்த அசுத்தம் தேங்கி இருக்கும். மேல் பகுதியில் உள்ள நீரை மட்டும் வடிக்கட்டி குடிக்கலாம். ஒரு கொட்டையின் மூலம் குறைந்தபட்சம் 50 லிட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும்


Thursday, December 25, 2014

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க

புதினா:

1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும்

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்: 

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும்

தேங்காய் எண்ணெய்:

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும்.



http://www.onlytamil.in/2014/12/blog-post_60.html

Wednesday, December 24, 2014

நூடுல்ஸ்களின் அபத்து


இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?


 உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.


http://www.dinakaran.com/Citizen-journalist/cj-did-you-knowdetail.aspx?id=202&mymode=didyou


Tuesday, December 16, 2014

இயற்கை வழி எரிவாயு


விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிருத்தித் திட்டம் (நார்டெப்) ‘சக்தி சுரபி’ என்ற எரிவாயுக் கலனை முன்னிறுத்தி வருகிறது.

சக்தி சுரபி சமையலறைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றில் இருந்து இயற்கையான முறையில் எரிவாயுவை உண்டாக்குகிறது.

சக்தி சுரபி அமைப்பதற்கான எல்லா விதமான உதவிகளையும் விவேகானந்த கேந்திரத்தின் நார்டெப் செய்து தருகிறது. ஒரு நாள் பயிற்சிக்குப் பிறகு இதற்கான உபகரணங்களை வழங்குகிறார்கள். இதற்காகக் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். இது கிராமப் புறங்களுக்கு மட்டும் ஏற்றது எனச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இது நகரங்களுக்கும் ஏற்றதுதான். வீட்டின் மொட்டை மாடிகளில் இதை நிறுவிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு: 94426 53975 (நார்டெப்)


Monday, December 15, 2014

விகடன்: கீரைகளின் மகத்துவம்


http://news.vikatan.com/article.php?module=news&aid=36155&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

அரைக்கீரை

உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தைக் குறைக்கும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. சரும நோய்களைப் போக்கும். உடலில் இருக்கும் விஷதன்மையை முறிக்கும்.

நீர்முள்ளி

சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு பிரச்னையைச் சீர் செய்யும். தாது விருத்திக்கு நல்லது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

காசினி கீரை

சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம். இதைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் ஊசி போட வேண்டிய அவசியம் இருக்காது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரபோக்கு போன்றவற்றுக்கு நல்ல மருந்து.


பசலைக் கீரை

இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் இதில் அதிகம். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு தொடர்பான நோய்களை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதைக் கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்தக் கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாட்டைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு எதிரி. நீர் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

கரிசலாங்கண்ணி

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்த நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்து. புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது. கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகச் சாப்பிடலாம். கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. முதுமையைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்;
'முடக்கத்தான்’ என அழைக்கப்படும் அதி அற்புதமான மூலிகை தான் அது. 'முடக்கு வலியை அற்றான்’ என்கிற அர்த்தத்தில் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. 

கீரை சமையல் குறிப்புகள்:
கீரையை மாவில் போட்டு அரைத்து அடையோ, தோசையோ செய்து சாப்பிட்டால் கொஞ்சம் மருந்து வாசனை அடிக்கும். அதைப் போக்க, கீரையை மிக்ஸியில் அடித்து, மாவில் கலந்து தோசையோ... அடையோ செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கீரையை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி, உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து அரைத்து துவையலாகப் பயன்படுத்தலாம். பொடியாக நறுக்கி, மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்துடன் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்புகளுடன் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இப்படி பலவிதமாக சமைத்துப்  பயன்படுத்தலாம்.

பொருள் சொல்லும் ஊர்

பாய் --> பத்தமடை http://www.kadalpayanangal.com/2014/12/1.html


Sunday, December 14, 2014

பாய்


ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான உடம்பு உபாதைகள் கொண்டு இருக்கின்றார், அதை நீக்குவதற்கு நாம் தூங்கும் படுக்கை கூட உதவி செய்யும் தெரியுமா ?
 படுக்கைகள் பலவிதம்.
 எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

 கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
 கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
 பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
 ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.  மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.  மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும் இன்று நாம் பாய் என்பதை நமது உடல் நலம் பார்த்து வாங்குகிறோமா என்ன ?

http://www.kadalpayanangal.com/2014/12/1.html

அவள் விகடன்: விஷக்கடிக்கான மருத்துவ முறைகள்


கிராமம், நகரம் வித்தியாசமில்லாமல் சில ஜவராசிகள் மனிதர்களுடன் இரண்டற கலந்து வாழ்ந்து வருகின்றன. அழையா விருந்தாளிகளாக வந்து நம் இல்லத்திலேயே தங்கிவிடும். அவை, அவ்வப்போது கொடுக்கும் சிறுதொல்லைகளை சமாளிக்கும் எளிய வழிமுறைகள் இதோ…
பல்லி!
பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து வந்தால் விஷம் குறையும்.
பூச்சிக் கடி!
சில நேரங்களில் பெயர் தெரியாத பூச்சிகள் கடித்துவிடும். எந்த பூச்சி கடித்தாலும், வெதுவெதுப்பான நீரில், மக்காச்சோளமாவு, சமையல் சோடா இரண்டையும் சேர்த்துக் கலந்து, பூச்சிக் கடித்த இடத்தில் தடவினால்… விஷம் இறங்கும்.
அரணைக் கடி!
அரணை கடிப்பதைவிட நக்கிச் சென்றுவிடும். இதுவே விஷம் என்பார்கள். இதற்கு சீமை அகத்தி இலையை விழுதாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து கடிவாயில் பூசி வந்தால் விஷம் குறையும்.
தேனீ, குளவி!
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.
தேள் கடி!
20 மிளகுடன், தேங்காய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுவந்தால் தேள்கடி விஷம் குறையும். அல்லது வெள்ளைப் பூண்டை அரைத்து கடிவாயில் தடவினால் விஷம் குறையும். புளியைக் கரைத்து சிறிது குடித்துவிட்டு, தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம் இறங்கும்.
கம்பளிப்பூச்சி!
கம்பளிப்பூச்சியின் ரோமம் உடலில் பட்ட இடத்தில் நல்லெண்ணெய் தடவினால் வீக்கம், அரிப்பு நீங்கும். அல்லது முருங்கை இலையை அரைத்து பற்று போட்டாலும் அரிப்பு குறையும். வெற்றிலையை சாறு வரும் அளவுக்கு அழுத்தி தேய்த்தாலும் அரிப்பு குறையும்.
பூரான்!
வெற்றிலைச் சாற்றில் மிளகை நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதை எடுத்து காயவைத்து சாப்பிட்டு வந்தால், பூரான் கடி விஷம் குறையும். துளசி இலைகளைக் காயவைத்து பொடி செய்து, 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் பூரான் விஷம் குறையும்.
விஷக்கடி வலி நீங்க!
கரிசலாங்கண்ணி இலையை ஆட்டுப்பாலில் அரைத்து கொடுத்தால், விஷக்கடியால் ஏற்படும் வலி குறையும்.
மேற்சொன்ன எந்த ஜந்து கடித்தாலும் நாட்டுத் தக்காளி, மணத்தக்காளி செடிகளின் இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, அதில் 200 மில்லி தினமும் குடித்து வந்தால் விஷம் குறையும். விஷ ஜந்துக்கள் எது கடித்தாலும், உடனடியாக கடிவாயில் சுண்ணாம்பைத் தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவது முதல் உதவியாக இருக்கும்.
நாய், பூனை, பாம்பு!
நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகள் கடித்தால், உடனடியாக வெங்காயம், உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கடிபட்ட இடத்தில் தடவினால் விஷம் குறையும். எலி கடிக்கும் இதே வைத்தியம் பலன் கொடுக்கும். இந்த முதல் உதவியைச் செய்தபிறகு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது. சாதாரண பாம்புகள் கடித்தால், சுண்ணாம்பை தடவி, எட்டு மிளகை வாயில் போட்டு மென்று விழுங்குவதே போதுமானதாக இருக்கும். விஷப்பாம்புகள் என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.

Sunday, December 7, 2014

முகத்திற்கு இயற்கை மருத்துவம்

பருக்களுக்கான லேசர் சிகிச்சைக்கு பதில்
* மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு கலந்து, பருக்கள் மீது தடவி, 15 நிமிடத்திற்கு பின், கழுவி விடலாம்.
* முல்தானிமட்டியில் பன்னீர் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் கழுவ, பருக்கள் மட்டுமல்ல; அழுக்கும் போயே போய் விடும்.
பிளீச்சிங் செய்வதற்கு பதில்
கொஞ்சம் சர்க்கரை, சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய், சில சொட்டுகள் தேன் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து சிறிது நேரத்திற்கு கழுவி விடலாம்.
பேஷியல் செய்து கொள்வதற்கு பதில்
கடலை மாவு, மஞ்சள் துாள், எலுமிச்சை சாறு, பாலாடை முதலியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் பூசி குளிர்ந்த நீரால் கழுவினால், முகம், ‘பளீச்’ என்றாகி விடும்.

பொடுகு நீங்க லோஷன் போட்டு ஊற வைத்து சிகிச்சை செய்வதற்கு பதில்
* வெந்தயம் ஊற வைத்து அரைத்து தலையில், ‘பேக்’ போட்டு அலசி விடலாம்.
* தயிருடன் வெள்ளை மிளகு துாள் கலந்து முடிக் கால்களில் படும்படி ‘மசாஜ்’ செய்து அலசி விடலாம்.

கிருமிநாசினியாகும் வேப்பிலை
கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு
தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்
தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ
இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்
பளபளப்பான சருமத்திற்குத் தேன்
வயதாவதைத் தடுக்கும் கற்றாழை
க்ளென்சராக செயல்படும் நெல்லி

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=103694

Saturday, December 6, 2014

பெண்களுக்கான ஆப்

ஆல் இன் ஒன் வுமன் ஸ்டோர்!
‘வுமன் ஸ்டோர்’ எனும் ஆப்ஸ் பெண்களுக்குத் தேவையான அனைத்து ஷாப்பிங் இணையதளங்களையும் இணைத்து ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது. அது மட்டுமின்றி குழந்தை பாதுகாப்பு, உணவு, பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு போன்றவற்றுக்கு பயன்படும் அனைத்து வசதிகளையும் இந்த ஆப்ஸில் வழங்கியுள்ளது. பெண்கள் தினம், அன்னை யர் தினம் போன்ற சிறப்பு தினங்களுக்கு ஆஃபர்களையும் வழங்குகிறது இந்த ஆப்ஸ். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸை பின்வரும் இணையதள முகவரியில் டவுன்லோடு செய்யலாம்… https://play.google.com/store/apps/details?id=com.wTheWomensStore&hl=en


சிறுநீர் நோய் பற்றிய தகவல்கள்

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி. காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும். பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும். மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும். சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே. சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3078&cat=500

சிறுநீர கல்லை நிக்கும் வழிகள்:
http://senthilvayal.com/2015/01/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE/

Thursday, December 4, 2014

ஈரல்க்கான கை வைத்தியம்

டுதொடா செடியின் ஆறு அல்லது ஏழு இலைகள் எடுத்துக்கொண்டு, இரண்டு குவளைத் தண்ணீர்விட்டு, கால் குவளையாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி இலைக்கஷாயம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆடுதொடா இலைக் கஷாயத்தில் பாகு வெல்லம் சேர்த்து ஜீரா காய்ச்சுவதுபோல் பாகுபதத்தில் காய்ச்சிக் கொள்ளுங்கள். இதோடு கால் பங்கு தேன் கலந்து புட்டியில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள். இந்த சிரப் ஈரலுக்கு வலுகொடுத்து ரத்தத் தட்டுகளை உயர்த்தும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நிலையிலோ, நாள்பட்ட ஈரல் நோய்களிலோ புற்றுநோய் சிகிச்சையின்போதோ, மாதவிடாய் சமய அதிக ரத்தப்போக்கின்போதோ ரத்தத் தட்டுகள் குறையும். அப்போது இந்த ஆடுதொடா டானிக் ரத்தத் தட்டுகளை உயர்த்தி உடலுக்குக் கேடயமாக இருக்கும்.
எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாமல் செய்வதால் குறைந்த நாட்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தயாரித்துவைத்துக்கொள்ளவும். இந்த ஆடு தொடா சிரப், சளி மற்றும் இருமலையும்  போக்குவது கூடுதல் பயன்!