Thursday, September 11, 2014

பாய் பற்றிய தகவல்

'பாய் போட்டு படுத்தா... நோய் விட்டு போகும்’ங்குறது உண்மை. இதுமாதிரியான விஷயங்களை தாடி வெச்ச சாமியாருங்க யாராச்சும் சொன்னா, கையைக் கட்டிக்கிட்டு வரிசையில நின்னு ஆயிரக்கணக்குல தட்சணை கொடுத்துட்டு வர்றவங்க நிறையபேரு. ஆனா, நம்ம முன்னோருங்க சூழ்நிலைக்கு தக்கப்படி விதம்விதமான பாய்களைப் பயன்படுத்தியிருக்குற விஷயத்தை மறந்துட்டோம். நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து வேலை செய்யறவங்களோட உடம்பு, அனல் மாதிரி கொதிக்கும். கவனச்சிதறல் உண்டாகும். வேலை செய்யறதுல சலிப்பும் வரும். இந்த அனல் உடம்புக்காரங்க கோரைப் பாயில படுத்தா... உடல் சூடு குறைஞ்சு குளிர்ச்சி உண்டாகும்.  'என்னமோ, போங்க’னு சோம்பலா சொல்லிக்கிட்டிருக்கிறவங்க, ஈச்சம் பாயில படுத்தா சுறுசுறுப்பாயிடுவாங்க. அதேசமயம், ஈச்சம் பாயில தொடர்ந்து படுத்தா, உடம்பு சூடு அதிகமாயிடும்ங்கிறதை மறக்க வேணாம். தாழம் பாயில படுக்கும்போது, தலைவலி, பித்தம் நீங்கும். எந்த வகையான பாயில படுத்தாலும், உங்களுக்கு முதுகு வலி வராது. முதுகுவலியில அவதிப்படுறவங்கள பார்த்தா, 'முதல்ல தரையில பாய் போட்டு படுங்க, வலி விட்டு போகும்’னுதான் மருத்துவர்களும் பரிந்துரை செய்யறாங்க.

No comments: