Friday, August 29, 2014

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை வகைகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் - (NRI)
இந்திய வம்சாவழியினர் (PIO)
வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign national)
இந்த மூன்று வகையினரைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
 என்ஆர்ஐ!
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் பாஸ்போர்ட் எடுத்து, வேலை நிமித்த மாகவோ, சொந்த வேலை காரண மாகவோ வெளிநாட்டில் வாழ்பவர்களை என்ஆர்ஐ என்கிறோம்.
பிஐஓ!
இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் 5 வருடங்களுக்குமேல் வாழ்ந்து, அந்த நாட்டின் வாழ்வுரிமை பெற்று இரண்டு நாட்டிலும் வாழும் உரிமை பெற்றவர் களை பிஐஓ என்கிறோம்.
 வெளிநாட்டைச் சேர்ந்தவர்!
வெளிநாட்டில் பிறந்து வெளிநாட்டு வாழ்வுரிமை பெற்று, வேலை நிமித்த மாகவோ அல்லது சொந்த வேலை காரணமாகவோ இந்தியாவில் வாழ்பவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்கிறோம். 
இனி இவர்களுக்கு ஏற்ற இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி பார்ப்போம்.

No comments: